கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களான கிருபேஷ்,சரத்லால் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

k

இதையடுத்து கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசுப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.