Skip to main content

கேரளா: விளிம்பு நிலை மனிதனுக்கும் ராஜவைத்தியம்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

kerala

 

 

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக நேற்று வரை 10,691 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் காட்டப்பட்டவை. இந்த மரணங்களில் பெரும்பாலும் இணை நோய்களினால் ஏற்பட்ட மரணங்களே அதிகம் என்பதும் உபரி அறிக்கை.

 

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் இணை நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாததும் மரணத்திற்கு காரணம் என்று சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார்.

 

ஆனால், அண்டை மாநிலமான கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசிலோ, கரோனா நோயாளி சாமான்யனாலும், சர்வேஸ்வரன் என்றாலும் சிகிச்சையின் அளவுகோல் வேறுபடாமல் நேர்கொண்ட முறையிலேயே பயணிக்கின்றன. மனித உயிரைக் காப்பாற்ற அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குருஷேத்திரமே நடத்துகின்றனர். அதற்கு சான்றாகவும் எடுத்துக்காட்டாகவுமிருக்கிறது இந்தச் சம்பவம் என்கிறார்கள்.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருக்கும் சாத்தான்கோட்டா பகுதியின் சாதாரண மீன் வியாபாரி டைட்டஸ். அந்த நகரின் சந்தையில் மீன் விற்றால்தான் இவரது குடும்பம் வாழ முடியும். 70 வயதிலும் டைட்டஸ் ஆரோக்யமானவர்தானாம். மீன் மார்க்கெட்டில் கடந்த 80 நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று கண்டிருக்கிறது. டெஸ்ட்டிற்கு பிறகு அந்நகர சுகாதாரத் துறையினரால் தாரிப்பள்ளி பகுதியிலிருக்கும் கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். தொற்றின் பலனாய் அவருக்கு சிறு நீரகம், நரம்பு, கல்லீரல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனையின் தொடர்புடைய பல்வேறு சிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் இணைந்து துவளாமல் தொடர்ந்து கூட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனராம்.

 

அரசு மருத்துவமனையில் மொத்தம் 72 நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறாராம். இதில் 42 நாட்கள் தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் டயாலிஸஸ் சிகிச்சையில் இருந்திருக்கிறார். பின்பு அவர் 20 நாட்கள் வரை கோமா நிலைக்கு போயிருக்கிறார். இதனை எல்லாம் மீட்டெடுத்து பரிபூரண குணமடைந்த டைட்டஸ், 72 நாட்களுக்கு பிறகு செப் 23 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார். ஆரம்பம் தொட்டு அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை 72 நாட்களாக அவரின் சிகிச்சைக்காக அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் 36 லட்சம் ரூபாய்.

 

டைட்டஸால் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 112. கொல்லம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் இன்றுவரை வெறும் 31 பேர்கள் மட்டுமே. இதனையொத்த ஜனத்தொகை கொண்ட நெல்லை மாவட்டத்தின் கரோனா தொற்று மரணம் நாளது வரையிலும் 196 பேர். கடவுளின் தேசத்தில் சாமான்யனுக்கும் ராஜவைத்தியம்தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.