55555

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மனைவி மலர்கொடி. வயது 47. இவரது மகன் கலைவாணன். வயது 28. இவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி பழனிவேல் (55) என்பவரும் மலர்கொடியும் கணவன்-மனைவி போல தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertisment

கடந்த இரண்டு மாதங்களாக மலர்கொடி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். இப்படி வேலை செய்யும் பணியாளர் ஒருவருடன் மலர்கொடி நெருங்கிப் பழகியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் மலர்கொடியை கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படிப்பட்ட நிலையில் நேற்று காலையில் மலர்கொடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்த கீழப்பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மலர்க்கொடியோடு சேர்ந்து வாழ்ந்தவந்த அவரது கள்ளக்காதலர் மாட்டு வியாபாரி பழனிவேல், மலர்கொடி மகன் கலைவாணன் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இப்படி பல்வேறு தரப்பினரிடமும் மலர்கொடி கொலை குறித்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மலர்கொடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழப்பழூர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.