Skip to main content

மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி...நினைத்ததை முடித்தார்களா? நிர்மலாவும், முகேஷும்..??

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில் 2017 ஏப்ரலில் அவரை திடீரென அஸ்ஸாமுக்கு  இடம்மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு போன நிலையில் அவருக்கு பதில் ஸ்ரீராம் புதிய இயக்குனராக அகழாய்வு பணியை தொடங்கினார்.

 

keeladi

 

அமர்நாத் நக்கீரனுக்கு அப்போது அளித்த பேட்டியில், இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன் ”அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் ”திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது. அதற்கான காரணத்தை கேட்டு விளக்கம் கேட்டுள்ளேன் என்றும் கூறியிருந்தார். அதை பேட்டியாக வெளியிட்டிருந்தோம்.

 

keeladi

 

 இந்நிலையில் 2017 ஏப்ரல் 28-ல் அமர்நாத்தின் இடமாறுதலை கண்டித்து தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் குரல் கொடுக்க மத்திய பாஜக மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் முகேஷ் சர்மாவும், இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கீளடிக்கு வருகை தந்தனர். இதில் உள்நோக்கம் இருக்கிறது இந்த அகழாய்வை மண்ணை போட்டு மூடப்பார்க்கிறார்கள் என்று சொல்லி    இதை எதிர்த்து திருமுருகன் காந்தி தலைமையில் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தி கைதாகினர்.

 

keeladi

 

 அது தற்போது நடந்தேறிவிட்டது. இந்த நான்காம் கட்ட அகழாய்வு ஏப்.18ல் தொடங்கியது அகழாய்வில் யானை தந்தம், தங்க காதணி, அச்சுக்கள், பொம்மைகள், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட 7 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் கண்டறிபட்டன. தமிழக தொல்லியல்துறை இயக்குனர் சிவா  தலைமையில் ஹெலிகேம் கேமரா மூலம் அனைத்தையும் படம் பிடித்தனர்.  அப்போது அவர் நம்மிடம் ”இந்த குழிகள் அனைத்தும் மண்ணைபோட்டு மூடப்படும், மொத்தமாக கீழடி அகழாய்வு இத்துடன் முடிக்கபடுகிறது இதற்கான அறிக்கையை தயாரிக்கும் பணியை அமர்நாத்திற்கு பதில்  ஸ்ரீ லெட்சுமி என்ற ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்கபடுகிறது என்றார்.

 

keeladi

மேற்கொண்டு பேச எனக்கு வாய்பில்லை எதுவும் கேட்க வேண்டுமென்றால் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் கேட்டுகொள்ளுங்கள் என்று நகர்ந்தார்.

 

 

இது தமிழகத்தில் மீண்டும் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே சர்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதன் ஆரம்பம் முதல் கீழடி அகழாய்விற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நம்மிடம் ”சார் வயிற்றெரிச்சாலாக இருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை அவர்கள் நினைத்த மாதிரி மூடிவிட்டார்கள்.  ஆனால் இரண்டு கட்டமாக ஆய்வு செய்த அதிகாரி அமர்நாத்தை அறிக்கை தாக்கல் செய்யவிடாமல் இதற்கு சம்மந்தமில்லாத லட்சுமி என்ற அதிகாரியை அறிக்கை தாக்கல் செய்ய சொல்வது என்ன நியாயம்? இதில் எதையோ மறைக்க பார்க்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார். 

 

keeladi

இதுகுறித்து இதற்காக போராடிய திருமுருகன் காந்தியிடம் கேட்டோம்…

 

keeladi

 

சென்ற வருடம் ஏப்2-8 ம் தேதியே பண்பாட்டுதுறை அமைச்சர் முகேஷ் சர்மாவும், இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வந்தபோதே நாங்கள் சொன்னோம் 

”இந்தியாவில் திராவிட இனம்தான் ஆரிய வருகைக்கு முன்பே இருந்தது என்ற வரலாறு உண்மை தெரிந்துவிடும் என்றுதான் அமர்நாத்தை மாற்றினார்கள். தற்போது இந்த அகழாய்வு பணியை மூடிவிடவேண்டும் என்று தாங்கள் நினைத்ததை செய்துவிட்டார்கள். இதன் முழு அறிக்கையை முறைபடி சட்டபடி அமர்நாத்தான் தாக்கல் செய்யவேண்டும். அதையும் மாற்றியிருக்கிறார்கள் இதை இன்று அண்ணன் வைகோவும் எதிர்த்து பேசியிருக்கிறார். இதே கருத்தை நாங்கள் அன்றே சொன்னோம் இப்படியெல்லாம் நடக்கும் என்று அது நடந்து விட்டது..என்றார்.

 

keeladi

 

இதற்கிடையே அஸ்ஸாமில் இருக்கும் இயக்குனர் அமர்நாத்திடமே பேசினோம் ”இதற்கான ஆய்வு அறிக்கை தாயாரிப்பு பணியை அகழாய்வு செய்த அதிகாரிதான் செய்வது வழக்கம் ஆனால் என்னை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அந்த பணியை ஸ்ரீ லட்சுமி ஆந்திராவை சேர்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்கபட்டதாக தகவல் அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்று தன் ஆதங்கத்தை சொன்னார்.

மொத்ததில் தமிழர்களின் வரலாறு வெளியே வந்துவிடகூடாது என்பதில் மத்திய மோடி அரசு முனைப்பாக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.