Skip to main content

5-வது நாளாக குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
ko

  

 கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் 5 வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. கடைகளும் திறக்கப்படவில்லை. குடிதண்ணீருக்காக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், நகரம் சன்னதி, வடகாடு, மாங்காடு, கைகாட்டி, கொத்தமங்கலம், பனங்குளம், பெரியார் இணைப்புச்சாலை, மற்றும் பல கிராமங்களுக்கு மீட்புக்குழுவினர் வரவில்லை என்றும் குறைவான பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியானதையடுத்தும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 

ko

 

அடுத்தடுத்த நாட்களில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் 5 வது நாளாக கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பேராவூரணி, ஆலங்குடி மேற்பனைக்காடு ஆகிய ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கவில்லை. அதே போல கொத்தமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டை, கீரமங்கலம், அறந்தாங்கி பகுதிக்கும் வடகாட்டில் இருந்து ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிக்கும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அறந்தாங்கி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்படாமல் கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

ko


    புயல் பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் உடைந்து பழுதடைந்துள்ளதால் மின்சாரம் தடைபட்டு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தந்த கிராம இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் ஜெனரேட்டர் வசதி செய்து குடிதண்ணீர் பிரச்சனையை ஓரளவு தீர்த்துள்ளனர். தற்போது ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பல ஊர்களில் குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பல கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. காசிம்புதுப்பேட்டை கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைக்காததால் அந்த ஊர் இளைஞர்கள் டேங்கர் உதவியுடன் நகரம் கிராமத்தில் வந்து குடிதண்ணீர் எடுத்துச் சென்றனர். அதே போல கொத்தமங்கலம் பகுதியில் குடிதண்ணீர் டேங்கர் லாரிகள் எப்ப வரும் என்று சாலை ஓரங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
        

சார்ந்த செய்திகள்

Next Story

கொத்தமங்கலத்தில் ஓட்டல் உரிமையாளர் வெட்டி படுகொலை!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதிநகர்  பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேஷ் (35). இவர் கொத்தமங்கலம் வாடி மாநகர் கடை விதியில் தனது தந்தை நடத்தி வந்த ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் கைக் குழந்தை உள்ளனர்.
 

இவர் இரவு 10.00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல நேற்று (07.01.2020) இரவு கடை முடிந்து வியாபாரம் செய்த பணத்துடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரது வீட்டிற்கு முன்பே சுமார் 500 மீட்டர் தூரத்தில் தயாராக நின்ற மர்ம கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

pudukkottai district kothamangalam incident police investigation


கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். 


முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Next Story

ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், மறமடக்கி, மாங்காடு, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் நீர்நிலை சீரமைப்பு பணிகளை அந்தந்த கிராம இளைஞர்களே சொந்த செலவில் தொடங்கி செய்து வருகின்றனர். பல வருடங்களாக மராமத்து செய்யப்படாததால் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சீரமைப்புகளை முழுமையாக செய்து விடுவோம் என்று கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

அதேபோல வட்டாட்சியரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. அதனால் சில நாட்களாக கனமழை பெய்தும் கூட சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. அதனால பணத்தையும், உழைப்பையும் செலவழித்து சீரமைத்த இளைஞர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 

இந்த நிலையில் தான் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 ஏரிகள், குளங்கள் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆயக்கட்டுதாரர்களே பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை 29 சதவீதம் அளவிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. 

pudukkottai Officials asked for a week's time to eliminate the occupation  Remove in 2 days collector order


மேலும் தற்போது மழை தொடங்கிவிட்டதால் இனிமேல் எப்படி பணிகள் தொடர்ந்து செய்வது என்பது பற்றி ஆலோசனைகளை அதிகாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதேபோல் இந்த பணிகள் சரியாக நடைபெற வேண்டும் என்பதால் துறை செயலர் நேரடியாக வந்து பார்வையிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பார்வையிட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது, கொத்தமங்கலம் மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்களே குளங்களில் மராமத்து பணிகளை செய்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு கூட தண்ணீர் வரவில்லை என்ற கேள்விக்கு,
    
மனு கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். என்றவர் பொதுப்பணித்துறை குளமா? என்று கேட்டுவிட்டு அந்த பகுதிக்கான பொறியாளர் யார் என்று அருகில் அழைத்து ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட்டுக்கு போவதாக நோட்டீஸ் கொடுப்பதாக சொல்றாங்க.. என்று பொறியாளர் பதிலளித்தார். கோர்ட்டுக்கு போகல, ஸ்டே வாங்கல தானே அப்பறம் என்ன தயக்கம். இதுவரை என்ன பணிகள் நடந்திருக்கு என்ற ஆட்சியர் கேட்க, அது வந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வருகிறோம் என்றார் பொறியாளர்.

pudukkottai Officials asked for a week's time to eliminate the occupation  Remove in 2 days collector order



சரி எப்ப முழுமையாக அகற்றி அறிக்கை கொடுப்பீங்க. என்ன ஆக்கிரமிப்பு இருக்கு என்றார் ஆட்சியர். கட்டிடங்கள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. அடுத்த வாரம் அகற்றி அறிக்கை தருகிறோம் என்று இழுக்க..ஏன் அவ்வளவு நாள் நாளை மறு நாள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கனும். அது எந்த வட்டம் ஆலங்குடியா? தாசில்தார், போலீஸ் துணைக்கு அழைச்சுட்டு போய் உடனே 2 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை கொடுக்கனும் என்றார்.


அடுத்து மேற்பனைக்காடு பெரிய குளம் குடிமராமத்து பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரை குளத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு.. அது கல்லணை கோட்டத்தில் வருகிறது. பணிகள் தொடங்கி நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வளவு சீக்கிரம் ஆற்றில் தண்ணீர் வரும் என்பது தெரியவில்லை என்றார். ஆட்சியர் கொடுத்த மனுவை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட தகவல் பரவியதும், இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிரடி உத்தரவிட்ட ஆட்சியருக்கு இளைஞர்கள் நன்றி கூறினார்கள்.