Skip to main content

மோடி அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை: கே.பாலகிருஷ்ணன் 

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். நகர்க்குழு உறுப்பினர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நடைபெற இருக்கும் தேர்தல் போராட்டத்தில் மோடி கஜானவை தமிழகத்தில் இறக்கி வெற்றிபெற்றுவிடலாம் என்று அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுவதும் தாமரை கருகி வருகிறது. இந்தநிலையில் அதிமுக பாமகவை வைத்துகொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்று தமிழிசை பேசிவருகிறார்.

 

k.balakrishnan cpi m


மோடி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை. சிலை வைக்க ரூ 3 ஆயிரம் கோடி செலவு செய்த மோடி தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய 12 மாவட்டங்களுக்கு ரூ 300 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார். இந்த மக்கள் வீடுகளை இழந்து நிற்கும் போது அவர்களை பார்க்க 10 நிமிடத்தை ஒதுக்காத மோடி, சாமியார் சிலை திறப்பதற்கு 3 மணிநேரம் காத்திருந்து அவருடன் சேர்ந்து ஆட்டம் ஆடுகிறார். 11 எம்எல்ஏக்கள் வழக்கில தீர்ப்பு வந்துவிட்டால் எடப்பாடி முதல்வராக நீடிக்க முடியாது. அதனால் பாஜக மோசமான நிலையை எடுத்து மிரட்டி வருகிறது.
 

 மோடி ஆட்சி பொறுபேற்றதிலிருந்து 1920 மத கலவரம் நடைபெற்றுள்ளது. இதில் 363 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 163 கலவரங்கள் நடத்தப்பட்டு 63 பேரை கொலை செய்துள்ளனர். சிறுபான்மை, பெருபான்மை மக்களிடம் சாதி, மத அடிப்படையில் கலவரங்களை துண்டிவிட்டதே மோடி ஆட்சியின் சாதனை.
 

மோடி விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட எந்த வாக்குறிதிகளும் நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பன்பாடு கலாச்சாரத்தை மோடி அரசு சீரழிக்கும் வேலையில் செய்து வருகிறது. தமிழை அழிக்கும் கட்சியுடன் தமிழ், தமிழ் என்று கூப்பாடு போட்ட பாமக கூட்டணி வைத்துள்ளது. குடும்பத்தை வலுபடுத்தவே கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ். இது சந்தர்ப்பவாத கூட்டணி.
 

 அன்புமணி முதல் கையெழுத்தை டாஸ்மார்க் கடைக்கு அருகில் மாங்கா உறுகாய் கடை வைக்க போட போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை நிருபிக்கும் வகையில் தற்போது கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மோடியின் அராஜகபோக்கை கண்டித்து திமுக வுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.