Skip to main content

"அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது மோடி அரசு" - கே.பாலகிருஷ்ணன் தாக்கு!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம், மோடி அரசு இந்திய அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிற சம்பவமாக உள்ளது. பாராளுமன்றத்தில் மோடி அரசியல் சட்டத்தை புகழ்ந்து பேசுகிறார். ஆனால் அதே நேரத்தில் எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்திற்கு வெளியே, அரசியல் சட்டத்தை மோடி அரசு மதிக்கவில்லை என போராட்டம் நடத்துகின்றனர். இந்த நிலையில்தான் இந்தியா உள்ளது என்றார்.

 

k.Balakrishnan



பின்னர் இரவு 12 மணிக்கு பிரதமரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை விலகிக் கொள்கிறார்கள் இது கண்டனத்துக்குரியது. பிஜேபி நினைத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு கொடுக்கவில்லை என்றால் இவர்கள் குதிரை பேரம் பேசி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து இருப்பார்கள். மகாராஷ்டிராவில் பாஜக செய்யும் செயல் அரசியல் சட்டத்தை கேவலப்படுத்தும் காரியமாகும் என்று குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை அறிவித்துவிட்டு, நேரடித் தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. வார்டுகள் மறுசீரமைப்பு செய்து ஒழுங்குபடுத்தப்படவில்லை. புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகள் அமைக்கப்படவில்லை. இவைகளெல்லாம் தேர்தல் நடத்தாததற்கு அதிமுக அரசு செய்யும் செயலாக உள்ளது. தமிழகத்தில் துக்ளக் தர்பார் ஆட்சி நடக்கிறது. அதிமுகவினர் பொதுக்குழுவில் நீட்தேர்வு விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி தனி சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு ஏன் அழுத்தம் தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது குறித்து முழுமையான விசாரணை இல்லை. அதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. தொடர்ந்து இதுபோன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டனத்துக்குரியது. இதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் பொருத்தமானது. ஒரு தனிப்பட்ட சமூகத்தில் இருப்பது சரியான நிலை இல்லை. நடராஜர் கோயிலில் செவிலியரை தாக்கிய தீட்சிதரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை கைது செய்வதில் தாமதப்படுத்துவது, காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் அரசியலில் நடிகராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியல் கட்சியில் இருந்துகொண்டு மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றினார்கள். ஆனால் கமலும், ரஜினியும் அப்படி அல்ல. கமல் மற்றும் ரஜினி ஒன்றாக இணைவது அவர்களால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது என்பதையே காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தான் பல்வேறு குழப்ப நடவடிக்கைகளை செய்து வருகிறது என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.