Skip to main content

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க தவறிவிட்டது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு  எழுதிய யார் கைகளில் இந்து ஆலயங்கள் என்ற நூல் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிட ரமேஷ்பாபுவின் கல்லூரிகால ஆசிரியர் ராமநாதன் பெற்றுக்கொண்டார்.

 

K.balakrishnan Condemned BJP

 



அதனை தொடர்ந்து  பேசிய கே.பாலகிருஷ்ணன், "ரமேஷ்பாபு பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே யார் கைகளில் இந்து ஆலயங்கள் என்ற நூலை எழுதியுள்ளார். சரியான நேரத்தில் தான் இந்த நூலை எழுதியுள்ளதாக நான் கருதுகிறேன். ஏனெனில் அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆலயங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என மத்திய அரசு ஒருபுறமும்,  பாஜகவினர் ஆலயங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கூறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மறுபுறமும் நெருக்கடி கொடுத்து வரும் காலகட்டத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

 



நூறு ஆண்டுகள் வரலாறு படைத்த சுமார் 70 ஆயிரம் கோயில்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கூறும் மத்திய அரசு அது நிர்வகித்து வரும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க தவறி வருகிறது. திருச்சி பெல் நிறுவனம், எல்ஐசி  போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் குறியாக உள்ளது. கோயில்களை கைப்பற்றி அதில் இந்துத்துவாவையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த வேண்டும் என முடிவு செய்து ஒரு பண்பாட்டு போராட்டமே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில அரசு எந்த முடிவும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது சரியல்ல. இதே சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் வைணவ சிலைகளை வைக்கக்கூடாது என எதிர்த்து உண்ணாவிரதம், போராட்டம்,  தற்கொலை வரை சிதம்பரம் தீட்சிதர்கள் சென்றனர் என்ற வரலாறு உண்டு. அதேபோல் இந்து மதத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷார் என மார்க்சிய கம்யூனிஸ்ட்  கட்சி கூறவில்லை காஞ்சி சங்கராச்சாரியேரே கூறியுள்ளார்" என தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.