Skip to main content

பாவலர் அறிவுமதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! -ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை வழங்குகிறது

Published on 14/08/2019 | Edited on 14/08/2019


 

ar



ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையில் ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் விழா, வரும் 18-ந் தேதி, அங்குள்ள ஸ்ரீவித்யா மந்திர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் ஒருநாள் விழாவாக நடக்கிறது.
 

காலை 9 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வோடு தொடங்கும் இந்த விழாவில், கலைமாமணி வேல்முருகன் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் முனைவர் அருள் தக்லைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் பரிசுகளை வழங்கி,  பரிசுபெற்றவர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து டாக்டர் எ.செல்லகுமார் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், ’விடியலின் விலாசம்’ என்ற தலைப்பில் தனியுரை நிகழ்த்துகிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், விருது வழங்கு நிகழ்ச்சி  நடக்கிறது. 


 

அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வே.சந்திரசேகரன் தலைமையில் , தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, திரைப்படப் பாடலாசிரியரும் பாவலருமான அறிவுமதிக்கு வழங்கப்படுகிறது. விருதை நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பாவலர் அறிவுமதிக்கு வழங்கி வாழ்த்துரை  ஆற்றுகிறார்.  

பின்னர் கல்வியாளர் சையத்து தலைமையில் இயக்குநரும் எழுத்தாளருமான பாரதிகிருஷ்ணகுமார், ’கண்ணீர் விட்டு வளர்த்தோம்’ என்ற தலைப்பில் தனியுரை நிகழ்த்துகிறார். 
 

நிறைவாக அறக்கட்டளைச் செயலாளர் சீனி. திருமால் முருகன் தலைமையில், ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில், ’அறியாமை இருளகற்றும் அதிகாலை வெளிச்சம்’ என்ற தலைப்பில் நகைச்சுவைப் பாட்டு மன்றம் நடக்கிறது. இதில் நெடுவாசல் ராணி குமார், மதுரை கிரி.சுரேந்திரன், சிவகாசி சசிகலா, திருமதி கெளதமி, புதுக்கோட்டை கலைராசன், கும்பகோணம் கிருபா ஆகியோர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகள் சிறப்புற நடந்துவருகிறது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதே வீட்டில் இரவெல்லாம் பேசினோம்!" - மகேந்திரன் குறித்து நெகிழ்ச்சி நினைவுகள்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த இயக்குனர்களில் முக்கியமானவரான இயக்குனர் மகேந்திரன் நேற்று காலமானார். இவர் குறித்து இயக்குனர் லிங்குசாமியும் கவிஞர் அறிவுமதியும் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.

லிங்குசாமி 

 

lingusamy



"மேற்குவங்கத்துக்கு ஒரு சத்யஜித்ரே கிடைத்தது போல நமக்குக் கிடைத்தவர் மகேந்திரன் சார். என்னுடைய ஆனந்தம் படத்தில் கொஞ்சமாவது ஒரு இயல்புத்தன்மை இருந்தது என்றால் அதற்குக் காரணம் அவரது படங்கள்தான். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இதே வீட்டில் என்னை அழைத்து  மணிக்கணக்காக இரவு உணவு ரெடி பண்ணி இரவெல்லாம் சினிமா குறித்து பேசியிருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்."



அறிவுமதி

 

arivumathy



"என் நண்பர் தசரதனால் அவருக்கு இன்னொரு பிள்ளையாக நான் அறிமுகமானேன். மகேந்திரன் அவர்கள், ஒரு உரையாடல் ஆசிரியராக 'வாழ்ந்து காட்டுகிறேன்' போன்ற படங்களில் பக்கம் பக்கமாக எழுதிய வசனங்களுக்கு கைதட்டல் பெற்றவர். அவரே இயக்குனரான போது, அத்தனை பக்கங்களையும் சுண்டக் காய்ச்சி, வெகு சில பக்கங்கள் மட்டுமே வசனம் எழுதி காட்சியில் கவர்ந்தவர். 'உதிரிப் பூக்கள்' படத்தில் கணவன் திரைப்படத்துக்கு அழைக்கும்பொழுது மனைவி வானத்தைப் பார்க்கும் காட்சி அரங்கில் உள்ள அனைவரையும் கைதட்ட வைத்தது. நம் தமிழ்நாட்டின் மிருனாள் சென் போன்ற சிறந்த இயக்குனரை இழந்து தவிக்கிறோம். என் தலைவன் பிரபாகரன் இவரை அழைத்து உரையாடி மரியாதை செய்தார். அந்த நினைவும் எனக்குள் இன்னும் இருக்கிறது."