தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

big boss

shakshi family

Advertisment

Advertisment

இதனால் இந்த வாரம் யாரையும் வெளியே அனுப்பமாட்டார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சாக்ஷி வெளியேற்றப்பட்டார். பின்னர் அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களுடன் பேசும் வாய்ப்பு சாக்ஷிக்கு அளிக்கப்பட்டது. அப்போது கவின் சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது குறிக்கிட்டு பேசிய சாக்ஷியின் தந்தை, "இவர் ஏன் சாரி கேட்கிறார் என்று சாக்ஷியின் தந்தை கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கவின், சாக்ஷியை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டேன் என்றார். அதற்கு சாக்ஷியின் தந்தை இது வெறும் விளையாட்டு தானே இதற்கு ஏன் சாரி கேட்கிறீங்க என்றார். அப்போது கவின் சோகமாக உட்காந்து இருந்தார்.