kavignar senkuttuvan incident dmk mkstalin

கவிஞர் செங்குட்டுவன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கவிஞர் செங்குட்டுவன் மறைவெய்தியது பெரும் வேதனையும், பேரிழப்புமாகும். நல்ல தமிழ்ச்சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில், செங்குட்டுவன் ஆற்றிய பணிபோற்றத்தக்கதாகும். கவிஞர் செங்குட்டுவனின் எழுத்துகள் என்றென்றும் நிலைத்து வாழும்; அவரது பெயரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். திராவிட சிந்தனையிலேயே வாழ்நாளெல்லாம் திளைத்திருந்த கவிஞர் செங்குட்டுவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment