Skip to main content

சாக்கு போக்குச் சொன்ன மாமனார்... மரக்கட்டையால் தாக்கிய மருமகள்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

sendurai

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது காவேரி பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது தங்கசாமி. இவருக்கு 3 மகன்கள். மூவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன் பிறகு பெரியவர் தங்கசாமி தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை வாய்மொழியாக மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார். அதில் மூத்த மகன் ராமலிங்கம் இறந்துவிட்டதால் அவரது மனைவி ராணி அந்தப் பாகத்துக்கு உரிமையாளரானார். 

 

தங்கசாமி சொத்தை வாய்மொழியாக பிரித்துக் கொடுத்திருந்தாலும் கூட அதை முறைப்படி பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்து தருமாறு மூத்த மருமகள் ராணி மாமனார் தங்கசாமி இடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். அதற்கு தங்கசாமி சாக்கு போக்குச் சொல்லி வந்துள்ளார். இதனால் மாமனார் மருமகள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. தங்கசாமி அவ்வப்போது மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதுபோதையில் தங்கசாமி வீட்டில் படுத்திருந்தபோது மருமகள் ராணி நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராணி அங்கிருந்த மரக்கட்டையால் தங்கசாமியைத் தாக்கியுள்ளார். தங்கசாமி நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். அவரை இளைய மகன் செல்வராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து ரங்கசாமி இளைய மகன் செல்வராஜ் செந்துறை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து செந்துறை போலீஸார் தங்கசாமி சாவுக்கு காரணமான மூத்த மருமகள் ராணியைக் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக மாமனாரை அடித்துக் கொன்ற மருமகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.