Skip to main content

பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்திய காவல்துறையினர்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

ஓஎன்ஜிசி விவகாரத்தால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த கதிராமங்கலம் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழாவையொட்டி, அங்குள்ள பள்ளியிலும், கடைவீதியிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம்,என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பார்வையை இழுத்திருக்கிறார்கள் பந்தநல்லூர் காவல்துறையினர்.
 

தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி காவல் நிலையம் பந்தநல்லூர். அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமமே கதிராமங்கலம். இரண்டு வருடங்களாக ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பினால் வழக்கு, கைது, போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அப்பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் ஒருவித கருத்து முரண்பாடு இருந்தது.

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION

இந்தநிலையில் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி வரும் டெங்குகாய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும் பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா உள்ளிட்ட காவலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமமான மொழையூர் அரசு பள்ளியிலும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர். அதனை தொடரந்து கதிராமங்கலம் கடைவீதியில் தலைக்கவசம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள், அங்குள்ள அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்துல்கலாம் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், தலைக்கவசத்தின் அவசியம், போஸ்கோ சட்டம் உள்ளிட்டவற்றை பற்றி விளக்கி பேசினர்.
 

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION



விழாவில் பேசிய இன்ஸ்பெக்டர் சுகுணாவோ, "ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நமது அய்யா மறைந்த அப்துல்கலாமை போல சாதனையாளர்களாக வர வேண்டும், கனவு காணுங்க, நீங்கள் ஒவ்வொரு வரும் ஒரு அப்துல்கலாம் தான்" என்று பேசியவர் டெங்கு காய்சலை ஒழிக்க அரசு நினைத்தால் மட்டும் ஒழித்து விட முடியாது, மாணவர்களாகிய நீங்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் நினைத்து சுகாதாரத்தை பேனிக்காக்கவேண்டும். தலைக்கவசம் நமது உயிருக்கான கவசம். அதோடு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருமரம் கட்டாயம் வளர்க்க வேண்டும். மரம்தான் இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும்" என்று பேசிமுடித்தார். அதன் பிறகு அந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளோடு மரக்கன்றுகளை நட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.