Skip to main content

திருவாரூரில் கதண்டு கடித்து முப்பதுபேர் காயம்!!! 

Published on 13/05/2019 | Edited on 14/05/2019

திருவாரூர் அருகே விஷவண்டுகள் கடித்ததில் 30 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, விஷ வண்டுகளை உடனடியாக அழிக்க வேண்டுமென அரசுக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

kathandu



திருவாரூர் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் சமீபத்தில் இறந்த ஜெயராமன் என்பவரின் கருமாதி சடங்கு சோழ சூடாமணி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்தவர்களும், உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது புரோகிதர் புளியமரத்தடியின் கீழ் அருகில் கிடந்த குச்சிகளை வைத்து தீ மூட்டியுள்ளார்.

இதிலிருந்து வெளிப்பட்ட புகையால் அருகில் இருந்த மரங்களிலிருந்த கதண்டு என்கிற விச வண்டுகள் பறந்து வந்து அங்கிருந்தவர்களை பதம்பார்த்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் முகம், கண் இமை பகுதி, தலை என வண்டு கடியால் காயமடைந்தனர். அங்கிருந்த மற்றவர்களோ அலறியடித்து ஒட்டம் பிடித்து தப்பினர். 
 

kathandu



காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசவனங்காடு ஆரம்ப சுகாதர நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் விஷவண்டு தாக்குதலுக்குள்ளானவர்களை மேல் சிசிக்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "சோழ சூடாமணி ஆற்றங்கரையில் உள்ள புளியமரம், அரச மரம் உள்ளிட்டவற்றில் நீண்ட நாட்களாக  கதண்டு என்கிற விஷவண்டுகள் கூடுகட்டி அதிக அளவில் இருந்து வருகின்றன. இந்த ஆற்றங்கரை பாதையானது மக்கள் அன்றாடம் சென்று வரும் பிரதான பாதையாகும்.பலமுறை அரசாங்கத்திடம் கூறிவிட்டோம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால், இன்று முப்பதுபேரை கடித்துவிட்டது. கருமாதி வீடே பீதியாகிவிட்டது.  எனவே காவல்துறையினரும், தீ அணைப்புத்துறையினரும் உடனடியாக, உயிர் சேதம் ஏற்படுமுன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.