அடிக்கடி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் நடிகை கஸ்தூரி. அரசியல்வாதிகள் வரை இவரது கலாய்ப்பு சமீப காலமாக நீண்டு வருகிறது. இவர் பிக் பாஸில் 3ல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதில் மீரா மிதுனுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள கஸ்தூரி, "நான் இன்று யாரை சந்தித்திருக்கிறேன் என பாருங்கள்! ராமேஸ்வரம் போனாலும்.. இந்த பிக்பாஸ் விடாது போலருக்கே! என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி உள்ளே நுழைவார் என்று கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அவர் எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.