ADVERTISEMENT

காசியின் பாலியல் வழக்கு சிபிசிஐடி பிாிவுக்கு மாறியது!

05:19 PM May 28, 2020 | suthakar@nakkh…



கன்னியாகுமாி முதல் சென்னை வரை பல தரபட்ட இளம் பெண்கள், பெண் மருத்துவா் மற்றும் வசதியான குடும்ப பெண்களிடம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவா்களிடம் பாலியல் வேட்டை நடத்தி அதை வீடியோவா எடுத்து மிரட்டி, அந்த பெண்களிடமிருந்து பல லட்சங்களை கறந்த காசி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தான். அவனால் சுமாா் 90-க்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பல பெண்களை காசியின் கூட்டாளிகள் பலரும் இரையாக்கியுள்ளனா். இந்த நிலையின் காசியின் பாலியல் வேட்டை குறித்தும் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றியும் இதில் தொடா்புடைய அவனின் நெருங்கிய கூட்டாளிகள் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டதோடு, அந்த வழக்கையும் சிபிஐ விசாாிக்க வேண்டும் என்றும் இதை வலியுறுத்தி ஜனநாயக மாதா் சங்கத்தினரும், மா. கம்யூனிஸ்ட்டினரும் போராட்டங்கள் நடத்தினார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் சிறையில் இருந்த காசியை இரண்டு முறை போலீஸ் கஸ்டடியில் எடுத்த குமாி மாவட்ட போலிசாா் அவனிடம் விசாரணை நடத்தினர். இதன்மூலம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறாா்கள் என்பதை உணா்ந்த குமாி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி திாிபாதிக்கு பாிந்துரை செய்தாா். இதையடுத்து நேற்று இரவு காசி வழக்கை சிபிசிஐடி விசாாிக்க உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து இன்று குமாி மாவட்ட போலிசாாிடமிருந்து ஆவணங்கள் மற்றும் காசியை விசாாிக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை சிபிசிஐடி போலிசாாிடம் ஒப்படைக்கிறாா்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT