Skip to main content

காசியின் பாலியல் வழக்கு சிபிசிஐடி பிாிவுக்கு மாறியது!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
f



கன்னியாகுமாி முதல் சென்னை வரை பல தரபட்ட இளம் பெண்கள், பெண் மருத்துவா் மற்றும் வசதியான குடும்ப பெண்களிடம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவா்களிடம் பாலியல் வேட்டை நடத்தி அதை வீடியோவா எடுத்து மிரட்டி, அந்த பெண்களிடமிருந்து பல லட்சங்களை கறந்த காசி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தான். அவனால் சுமாா் 90-க்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் பல பெண்களை காசியின் கூட்டாளிகள் பலரும் இரையாக்கியுள்ளனா். இந்த நிலையின் காசியின் பாலியல் வேட்டை குறித்தும் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றியும் இதில் தொடா்புடைய அவனின் நெருங்கிய கூட்டாளிகள் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டதோடு, அந்த வழக்கையும் சிபிஐ விசாாிக்க வேண்டும் என்றும் இதை வலியுறுத்தி ஜனநாயக மாதா் சங்கத்தினரும், மா. கம்யூனிஸ்ட்டினரும் போராட்டங்கள் நடத்தினார்கள்.


இந்த நிலையில் சிறையில் இருந்த காசியை இரண்டு முறை போலீஸ் கஸ்டடியில் எடுத்த குமாி மாவட்ட போலிசாா் அவனிடம் விசாரணை நடத்தினர். இதன்மூலம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறாா்கள் என்பதை உணா்ந்த குமாி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி திாிபாதிக்கு பாிந்துரை செய்தாா். இதையடுத்து நேற்று இரவு காசி வழக்கை சிபிசிஐடி விசாாிக்க உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து இன்று குமாி மாவட்ட போலிசாாிடமிருந்து ஆவணங்கள் மற்றும் காசியை விசாாிக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை சிபிசிஐடி போலிசாாிடம் ஒப்படைக்கிறாா்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை எடுத்துக் கூறினேன்"- நடிகர் கமல்ஹாசன் பேட்டி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் மூன்று பேர் இறந்தது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (03/03/2020) காலை சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். 

indian 2 film incident actor kamal hassan press meet

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான காவல்துறையினர் சுமார் 02.30 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், "இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் எடுத்துக் கூறினேன். விபத்தில் உயிர் தப்பியோரில் நானும் ஒருவன்; இறந்த மூன்று பேருக்கு செய்யும் கடமையாக கருதி ஆஜராகி விளக்கமளித்தேன். சினிமாத்துறையில் மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து போலீசாரிடம் ஆலோசனை செய்தேன்." இவ்வாறு பேசினார்.