Skip to main content

13 ஆண்டுகளாக இருக்கும் டிஎஸ்பியை மாற்றாமல் 50 நாட்களில் எஸ்.பி. விக்ரமனை இடமாற்றம் செய்தது ஏன்? 

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 


கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி விக்ரமனை திரும்ப பணி அமர்த்த வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பியை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை கரூர் மாவட்ட பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. 

விக்ரமன்

v

 

கரூர் மாநகரில் உள்ள வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கரூர் மாவட்ட எஸ்பியாக விக்கிரமன் பணியாற்றி வந்தார். அவர் கந்துவட்டி சந்துக்கடைகள் போன்ற சட்டவிரோத செயலை தடுத்து நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் மத்தியில் அவரின் நடவடிக்கைகள் பெரும் வரவேற்பு பெற்றது. 

தமிழ்ராஜேந்திரன்

ட்

 

இந்நிலையில் 50 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில் அவர் திடீரென பணி மாற்றம் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள்.  சமூக வலை தளங்களிலும் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. அது மட்டுமின்றி அவருக்கு பதிலாக கரூர் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட பாண்டியராஜன் என்பவர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்கு தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் பெயரை குறிப்பிட்டார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அபராதம் விதித்தது. அதே போல வழக்கில் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி கருத்து கூறியதால் அங்கு அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

பாண்டியராஜன்

ப்

 

பொதுமக்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர்.  இதையடுத்து அவரை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது. மேலும் திருப்பூரில் நடந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதற்காக இவர் மீது கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டது . ஏற்கனவே பொதுமக்களுக்கு பிரபலமான எஸ்.பி.விக்கிரமனை குறுகிய காலத்தில் தமிழக அரசு பணியிடை மாற்றம் செய்ததற்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதற்கான உரிய பதிலை அளிக்க வேண்டும். மக்களுக்கு இதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். 

 

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி டிஎஸ்பி ஒருவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பல இன்ஸ்பெக்டர்களும் அவரை மாதிரியே தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கை வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் எஸ்பி விக்ரமன் ஐம்பது நாட்களில் மாற்றப்பட்டுள்ளார்.

கும்பராஜா

k

கரூரில் கல்லூரி பேராசிரியர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத டி.எஸ்.பி. கும்பராஜாவை மாவட்ட நீதிபதியே கண்டித்தும் நடவடிக்கை எடுக்க சொல்லியும் அவர் இன்னும் மாற்றப்படவில்லை. 

 

மாற்றப்பட்ட எஸ்பி விக்கிரமனை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.  அவரை மாற்றியது உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு முரணானது  என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.