Skip to main content

செந்தில்பாலாஜி மீது வழக்கு போட என்ன காரணம்?

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு 12 மணி முதல் 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

s

கரூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் டவுன் டிஎஸ்பி கும்பராஜா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் நுழையும் போது அதிமுக வேட்பாளர் இருப்பதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு டிஎஸ்பி கூறினார். அவர்களுக்கு நேரம் முடிந்து விட்டது என்று திமுக கூட்டணியினர் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது டிஎஸ்பி கும்பராஜா திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியை தள்ளி விட்டார்.

 


பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து உள்ளே அனுப்பினர். உள்ளே மீண்டும் காத்திருக்க வைக்கப்பட்ட போது மீண்டும் குளித்தலை டிஎஸ்பி சுகுமார் செந்தில்பாலாஜியை தள்ளி விட்டார்.  ஆனால் இதற்கு இடையில் செந்தில்பாலாஜி மீது 3 பிரிவுகளில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த போது செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தம்பித்துரையின் கடைசி தேர்தல் இது. இந்த தேர்தலில் டெபாசிட் இழந்து கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்க சென்று விடுவார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அனுமதி பெற்ற எங்கள் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை டி.எஸ்.பி.கும்பராஜா. அவர் அண்ணா திமுகவின் துணை செயலாளர். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம் என்று பேட்டி அளித்தார். 

 

இதனால் முன் கூட்டியே கரூர் போலிஸ் செந்தில்பாலாஜியின் மீது வழக்கு போட்டுள்ளது என்கிறார்கள். அதன் பிறகு திமுகவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் டிஎஸ்பி கும்பராஜா செந்தில்பாலாஜியின் கழுத்தில் கையை வைத்து தள்ளி விட்டிருக்கிறார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி காலமானார்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Former Minister Indira Kumari passed away

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி. இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுக கட்சியில் அவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி இன்று (15-04-24) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Next Story

”ஒன்றிய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்கப்படும்” - திமுக வேட்பாளர் உறுதி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
DMK candidate KE Prakash assured that weakened textile sector will be revived

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில்  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் கேஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

ஏழைக்குடும்பங்களின் வறுமையைப் போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்களின் 100 நாள் திட்டமானது 150 நாள்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.