Skip to main content

தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அதிமுக வேட்பாளர் இவர் தான்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், கடந்த, 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, குறைந்த ஓட்டுக்களையே பெற்று, தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்களில் மிக குறைவான  ஓட்டுகளை  வாங்கி தம்பிதுரை சரிவை சந்தித்துள்ளார்.

15- வது மக்களவை  தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் எம். தம்பிதுரை திமுகவின் கே.சி. பழனிச்சாமியை விட 47,254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

16- வது மக்களவை  தேர்தலில் திமுகவின் சின்னசாமி 3,45,475 எம். தம்பிதுரை அதிமுக 5,40,722 வாங்கி 1,95,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

17- வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 4.20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார்.

 

SENTHIL BALAJI

 

 

கரூர் மக்களவை தொகுதியானது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடச்சந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளை  உள்ளடக்கியது. கடந்த 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்  கைப்பற்றியது. 

 

அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 81 ஆயிரத்து, 936 ஓட்டுகள் கிடைத்தன. தற்போது 48 ஆயிரத்து 616 ஓட்டுகளாக சரிந்தது. 

 

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கீதா 83 ஆயிரத்து 977 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 44 ஆயிரத்து 315 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

 

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி 88 ஆயிரத்து 68 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 37 ஆயிரத்து 518 ஓட்டுக்கள் கிடைத்தன. 

 

வேடச்சந்தூரில் பரமசிவம் 97 ஆயிரத்து 555 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு, 55 ஆயிரத்து, 258 ஓட்டுகள் கிடைத்தன. 

 

விராலி மலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 84 ஆயிரத்து  701 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 40 ஆயிரத்து 104 ஓட்டுகள் கிடைத்தன. 

 

JOTHIMANI

 

 

மணப்பாறை தொகுதியில் சந்திரசேகர் 91 ஆயிரத்து 399 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தம்பிதுரைக்கு  48 ஆயிரத்து 644 ஓட்டுகள் கிடைத்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் பா.ம.க- தே.மு.தி.க கூட்டணி , பா.ஜக கட்சி தனி அணியாக போட்டியிட்டன. 

 

இந்த கட்சிகள் அனைத்தும் தற்போது கூட்டணியில் இருந்தும், அ.தி.மு.கவிற்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கவில்லை. கரூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கைவசம் இருந்தும், கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளைக் கூட பெற முடியாமல் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றும் கடைசியில் இந்த முறை செந்தில்பாலாஜி- ஜோதிமணியின் கூட்டு முயற்சியில் தோல்வியின் கடைசி இடத்திற்கே தம்பிதுரை  சென்று விட்டார். வாழ வந்த ஊரில் இருந்து தம்பிதுரையை பிறந்து ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் கரூர் மக்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.