Skip to main content

குளித்தலை இரட்டை கொலை- கூலிப்படை வைத்து கொலை செய்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

குளித்தலை இரட்டை கொலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக்கொண்டதால் தமிழக போலீஸ் மீது எதுவும் பிரச்சனை வரும் என்று தெரிந்த டிஐஜி இரட்டை கொலை வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறி குளித்தலை காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

karur kuliththalai incident  six person arrested in police and investigate

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மகன் நல்லதம்பி. விவசாயிகளான இவர்கள் தோட்டத்தில் பூச்செடிகளை பயிரிட்டு விற்பனை செய்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் இருந்த குளத்தின் 39 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நில ஆக்கிரமிப்பாளர்கள் வீரமலை, நல்லதம்பி மீது முன்விரோதத்தில் இருந்தனர். கடந்த ஜூலை 29-ஆம் தேதி இருவரையும் சசிகுமார், ஜெயகாந்தன், பெருமாள் உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் வெட்டி கொன்றனர். தந்தை, மகன் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை மாவட்ட 6 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.

 

karur kuliththalai incident  six person arrested in police and investigate

 


இதற்கிடையே இருவர் கொல்லப்பட்டது தொடர்பாகச் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளின் மெத்தனப் போக்கே நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் வீரமலை, நல்லதம்பி கொல்லப்பட்டது குறித்து குளித்தலை டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் முதலைப்பட்டி குளத்தின் மொத்த அளவு என்ன? எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


இந்நிலையில் நேற்று கொலை தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரணடைய பிரவீன் குமார் மற்றும் ஒருவர் வந்தனர். இதில் பிரவீன்குமார் மட்டும் சரணடைந்தார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். அவர் தப்பிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியது. இந்த வழக்கில் பிரவீன்குமார் ஏற்கனவே கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர், பணத்திற்காக கொலை செய்ய கூடியவன் என்பது தெரிந்தும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இந்த விசயத்தில் சரியாக விசாரிக்கவில்லை என்பது தெரிந்ததும் உடனே டிஜஜி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.