Skip to main content

குளித்தலை இரட்டை கொலை- கூலிப்படை வைத்து கொலை செய்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்!

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

குளித்தலை இரட்டை கொலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக்கொண்டதால் தமிழக போலீஸ் மீது எதுவும் பிரச்சனை வரும் என்று தெரிந்த டிஐஜி இரட்டை கொலை வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறி குளித்தலை காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

karur kuliththalai incident  six person arrested in police and investigate

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மகன் நல்லதம்பி. விவசாயிகளான இவர்கள் தோட்டத்தில் பூச்செடிகளை பயிரிட்டு விற்பனை செய்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் இருந்த குளத்தின் 39 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நில ஆக்கிரமிப்பாளர்கள் வீரமலை, நல்லதம்பி மீது முன்விரோதத்தில் இருந்தனர். கடந்த ஜூலை 29-ஆம் தேதி இருவரையும் சசிகுமார், ஜெயகாந்தன், பெருமாள் உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் வெட்டி கொன்றனர். தந்தை, மகன் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை மாவட்ட 6 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.

 

karur kuliththalai incident  six person arrested in police and investigate

 


இதற்கிடையே இருவர் கொல்லப்பட்டது தொடர்பாகச் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளின் மெத்தனப் போக்கே நீர் நிலை ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் வீரமலை, நல்லதம்பி கொல்லப்பட்டது குறித்து குளித்தலை டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் முதலைப்பட்டி குளத்தின் மொத்த அளவு என்ன? எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14- ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


இந்நிலையில் நேற்று கொலை தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரணடைய பிரவீன் குமார் மற்றும் ஒருவர் வந்தனர். இதில் பிரவீன்குமார் மட்டும் சரணடைந்தார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். அவர் தப்பிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியது. இந்த வழக்கில் பிரவீன்குமார் ஏற்கனவே கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர், பணத்திற்காக கொலை செய்ய கூடியவன் என்பது தெரிந்தும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இந்த விசயத்தில் சரியாக விசாரிக்கவில்லை என்பது தெரிந்ததும் உடனே டிஜஜி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.