karur jallikattu incident

Advertisment

தமிழகத்தில் பல இடங்களில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. அதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 27 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிவக்குமார் வயது (21) என்பவரது கண் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோனது.

ஜல்லிக்கட்டு போட்டியின் நான்காவது சுற்றின் போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலி கம்பி ஓரமாக அமர்ந்திருந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் வடசேரி சிவகுமாரை (21) மாடு குத்தியதில் முகத்தில் ரத்தம் வெளியேறியது. காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் சிவக்குமாரின் பார்வை பறிபோனது தெரியவந்தது. தொடர்ந்து சிவகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்மூளைக்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்ததால் மாடுபிடி வீரர் சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.