Skip to main content

கர்நாடக சிங்கமான கரூர் ஐபிஎஸ் அதிகாரி... பதவிவிலகலால் அதிர்ந்த மக்கள்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

பெங்களூரில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு சமூக செயற்பாட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளதற்கு வரவேற்புகளும் ஒரு பக்கம் அப்பகுதி மக்கள் அவருக்கு பிரியாவிடையும் அளித்து வருகின்றனர்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

கரூர் சின்னதாராபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎஸ்சாக தேர்வாகி கர்நாடக கவல்த்துறையில் சேர்ந்து பெங்களூரில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். கர்காலா பகுதியில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர் உடுப்பி மற்றும் சிக்மகளுரிலும் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்தார்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

உடுப்பியில் இருந்துபோது அவரை பணிமாற்றம் செய்த அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையான காவல் அதிகாரி என புரியவரும், அந்த அளவுக்கு நேர்மையான அதிகாரியாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் இருந்துள்ளார் அண்ணாமலை.

 

பணியாற்றிய இடங்களில் எல்லாம் குற்றங்களை ஒழித்து மக்கள் மனதில் இடம்பிடித்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மக்களின் நன்மதிப்பை பெற்றார். இதனால் அவரை கர்நாடகாவின் சிங்கம் என்று அன்புடன் அழைத்துவந்தனர்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

இந்நிலையில் காவல் பணியியல் இருந்து விலகி சமூக பணியில் ஈடுபட இருப்பதாக அவர் எடுத்துள்ள முடிவை வரவேற்றாலும் அவரை பிரிய விரும்பாத மக்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அவருக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மானசரோவர் யாத்திரை சென்ற போது வாழ்வின் மாற்றத்தை உணர்ந்ததாக கூறியுள்ள அதிகாரி அண்ணாமலை என்னுடன் பணியாற்றிய மதுகர் ஷெட்டி என்பவரின் திடீர் மரணம் என் வாழக்கையை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என தனக்கு உணர்த்தியதாக தெரிவித்துள்ள அவர் தீர ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

இந்நிலையில் அவர் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் செய்திகள் கசிந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தான் எந்த அரசியல் கட்சி தலைவர்களுடனும் தொடர்பில் இல்லை இன்னும்சில நாட்களின் என் முடிவு என்னவென்று தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இவரின் பதவி விலகல் முடிவு கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிபுரிந்த பகுதியை சேர்ந்த பலரும் அவருக்கு நேரில் சென்று பிரியாவிடை அளித்து வருகிற நிலையில் அவர் செய்த உதவிகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.