Skip to main content

அப்பாவி இரண்டு குழந்தைகளை உயிரோடு விழுங்கிய கிரானைட் பள்ளம்! 

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
karur

 

கரூர், ஜெகதாபி கிராமத்தையடுத்து பொரணி என்கிற ஊரின் ஒதுக்கு புறத்தில் கிரானைட் கல்குவாரி நீரில் மூழ்கி 2 குழந்தைகள்  பலியான சம்பவம் பெரிய சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. 

 

கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கிராமத்தில் குழந்தைகள் பொது இடங்களில் விளையாடுவதற்கு அதிக விருப்பமாக இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் ஜெகதாபி கிராமத்திற்கு அருகில் உள்ள பொரணி என்கிற ஊரில் 13, 10, 15, வயதுடைய 5 குழந்தைகள் பொது வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். 

 

இந்த நிலையில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் கரூர் ரவி என்பவருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ரொம்ப காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. அதனால் அந்த பகுதியில் முட்களும் புதர்களும் மண்டி இருந்தால் யாரும் அந்த பக்கம் செல்வதை தவிர்த்து வந்தனர். 

 

சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்கிருந்த பாறைகளை சுத்தம் செய்தனர். அப்போது தோண்டப்பட்ட பாறைகளுக்கு நடுவே மழை நீர் நிரம்பி குளம் போல் காட்சியளித்தது. இந்த நேரத்தில் அந்த பகுதியில் விளையாட வந்த குழந்தைகள் ஆர்வத்தில் தண்ணீரை பார்த்ததும் உள்ளே இறங்கி விளையாட ஆரம்பித்தனர்.

 

கிரானைட் குவாரியில், அதிகமான ஆழத்தில் பள்ளம் தோண்டி இருந்தால் குழந்தைகள் பள்ளத்தில் மூழ்கி போனார்கள். கிராமத்து மக்கள் குழந்தைகளை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்தனர். கடைசியில் தீயணைப்பு துறையினர் வந்து நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை மீட்டனர். மற்ற இரண்டு குழந்தைகளான கலையரசி (வயது 14), காவியாவை (வயது 8) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளின் உடலை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தனர்.   அப்பாவி குழந்தைகளை கிரானைட் பள்ளம் உயிரோடு விழுங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.