Skip to main content

பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி ஆர்டிஓவிடம் மனு அளித்த காங்கிரசார்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

  karur farmers request water congress rdo

 

ஆண்டுதோறும் டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்கு  காவிரியில் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதும் அதன் பிறகு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படுவதும் வழக்கம். கடந்த  ஆண்டு டெல்டா பாசனத்திற்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 250 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

 

இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்று கதவணையில் இருந்து தொடங்கும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக மாயனூர் முதல் குளித்தலை வழியாக திருச்சி மாவட்டம் வரை 63 கிலோமீட்டர் தூரம் பயணித்து சுமார் 25000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக புனரமைப்பு பணி மேற்கொள்ள 335.5 கோடி ரூபாய் நிதி கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள்  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பணியை மேற்கொள்வதற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் சம்பா அறுவடைக்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டு புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. பணி ஓராண்டுக்குள் முடிப்பதாக அப்போதைய அதிமுக அரசு விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஓராண்டுக்குள்ளாக பணிகள் முடிக்கப்படாமல் கடந்த  5  ஆண்டுகளாகவே பணி நீடித்து வந்தது.

 

இதன் காரணமாக தண்ணீர் தொடர்ந்து 5 ஆண்டுகளாகவே நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்டுள்ள வாழை, நெல், கரும்பு, வெற்றிலை ஆகிய பயிர்கள் காய்ந்து சேதமடைவதோடு, மேலும் நெல் சாகுபடியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டும் தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள நெல், வாழை,  கரும்பு, வெற்றிலை ஆகிய பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்காலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் திறந்து விட்டது போல இந்த இந்த வருடம் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி மற்றும் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் திறக்க கோரி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் இன்று கோரிக்கை மனுவை காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் வலையப்பட்டி வெங்கடாச்சலம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.