Skip to main content

போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாம எங்களை பாதுகாத்தவன்... இறந்த நாய்க்காக கதறும் மக்கள்!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

தெருமக்கள் பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயை  கொன்ற கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதும் விசாரணையில் இறங்கிய காவல்துறை 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. தங்களை பாதுகாத்த நாய்க்கு பிரியாவிடை கொடுத்த மக்களின் அழுகுரலுடன் நாயின் சடலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரிய பாச போராட்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.
 

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில், ரமேஷ் என்கின்ற ஒரு நாயை, அதே பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வளர்த்து வரும் நிலையில், அந்த தெருவில் அனைவரது வீட்டில் நன்கு பழகிய நிலையில், அனைவருக்கும் அந்த நாய் பழக்கமாகியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடமால், வந்த வழியே துரத்தும், இந்த நல்லகுணம் குண்ட நாயை அதிகம் நேசிப்பவர்கள் தான் அதிகம், இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த, ஒருவர் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்தும், அது அடிக்கடி குழைப்பதாக கூறிய நிலையில் இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.
 

ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயை கொல்ல தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி அந்த பகுதி மக்கள் திடீரென்று குப்பை லாரிகளை மறித்தும், சாலை மறியலிலும்  ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தினால் அந்த பகுதி வழியாக செல்லும் பள்ளி கல்லூரி வாகன பேருந்துகள் வரிசை கட்டி நின்றன.

karur district dog died people crying police arrested in municipality employees


பின்பு காவல்துறையினரும், அ.தி.மு.க நிர்வாகிகளும் வந்து மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நாயின் சடலம் எடுக்கப்பட்டு, பின்னர் கலைந்து சென்றனர். இந்த காலத்தில் மனிதனை தாக்கி விட்டு சென்றாலே, கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால், நாயை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூடிய சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலை மறியல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த நாய் இருக்கிற வரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருட்டு பயமும் இல்லாமல் இருந்தது. இது வரை நாங்கள் திருட்டு பிரச்சனைக்காகவும், எங்கள் பாதுகாப்புக்காவும் நாங்க போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்தது இல்லை. ஆனால் முதல்முறையாக அவனோட இறப்புக்கு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கோம் என்றார்கள்.
 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் நகராட்சி ஊழியர் வேலுச்சாமி மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷ் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.