Skip to main content

தேர்தலை நிறுத்துவேன்-கரூர் கலெக்டர்:முடிந்தால் நிறுத்தி பாருங்கள் - வேட்பாளர் ஜோதிமணி போனில் பேசிய ஆடியோ லீக்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

கரூர் எம்.பி.தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக வெற்றிப்பெற்ற அதிமுக தம்பித்துரை 3வது முறையாக வெற்றிபெறுபவதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி துணையோடு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் தம்பித்துரை வெற்றியை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். இந்த பதட்டமான சூழ்நிலையில் தான் கடைசி நாள் பிரச்சார அனுமதி கேட்டு ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏற்பட்ட குளறுபடியில் திமுகவினர் டென்ஷன் ஆகி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அனுமதி வாங்கினர். அதே நேரத்தில் அதிமுக நேரத்தை மாற்றி கொடுத்தனர். 

 

Karur Collector - Stop the Election - Speaking at the Candidate Jyothimani phone Audio leaked



ஆனாலும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் அதை ஏற்றுக்கொள்ளாமல் திட்டமிட்டபடி நடத்துவோம் என்று அறிவிப்பு திமுகவினர் இடையே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று திமுக சார்பில் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கரூர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்ததை கரூர் மாவட்ட ஆட்சியர் டெல்லி தேர்தல் தலைமைக்கு 100 பேர் வந்து என்னை கொலைமிரட்டல் விடுகிறார்கள், என் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 

 

Karur Collector - Stop the Election - Speaking at the Candidate Jyothimani phone Audio leaked



இதை வேட்பாளர் ஜோதிமணியிடம் போனில் கலெக்டர் பேசியிருக்கிறார். அதில் நான் நேர்மையான கலெக்டர் இரண்டு பக்கமும் நடுநிலையோடு நின்று தான் பணி செய்கிறேன். ஆனாலும் என்னை மிரட்டுகிறார்கள்,  நீங்கள் என்னை புகார் செய்து இங்கிருந்து மாற்றிவிடுங்கள், என் மீது குறையிருந்தால் சொல்லுங்கள் நான் ராஜினாமா செய்து விடுகிறேன். எப்படி இரவு நேரத்தில் என்னை பார்க்க வரலாம், நான் முன்னாள் ராணுவ வீரரின் மகன் எனக்கு பயமாக இருக்கிறது. கரூர் தேர்தலை நிறுத்த சொல்லி தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறேன். என்று சொல்கிறார். எல்லா வீடியோகளை நான் சமர்பிக்க போகிறேன். தேர்தலை நிறுத்த சொல்லி அனுப்பியிருக்கிறேன் என்கிறார். உங்களை நான் தேசிய தலைவராக பார்க்கிறேன். என்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. எனக்கு உயிர் பயம் வந்துவிட்டது. எனக்கு பாதுகாப்பு இல்லை சொல்லியிருக்கிறார். 

 

Karur Collector - Stop the Election - Speaking at the Candidate Jyothimani phone Audio leaked



அதே நேரத்தில் கலெக்டரின் இந்த பதிலை எதிர்கொண்ட வேட்பாளர் ஜோதிமணி நீங்கள் எங்களுக்கு தலைமை அதிகாரி உங்களை பார்க்க வருவதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது 24 மணிநேரமும் உங்களை சந்திக்கலாம் காரணம் இது தேர்தல் காலம், 13 இலட்சம் மக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை தேர்தல் அதிகாரி கொடுத்த உத்தரவை அமைச்சர் மீறி பேசுகிறார் அது குறித்து புகார் கொடுத்த தான் உங்களிடம் வந்தாங்க, அதை நீங்கள் கொலை மிரட்டல் செய்ய வந்தாங்க என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். ஆரம்ப முதலே தேர்தல் அதிகாரியான நீங்கள் அதிமுகவின் ஆளாக தான் நின்று செயல்படுகிறீர்கள். வழக்கு என்மீது போட்டாலும் அதை சந்திக்க தயாராக தான் இருக்கிறோம்.

 

தம்பித்துரை தோற்றுபோய்விடுவோம் என்கிற பயத்தில் தேர்தலை நிறுத்துவதற்கு நினைக்கிறார். அவர்களுக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள், நாங்கள் தேர்தல் தலைமை ஆணையத்தை நம்புகிறோம். அங்கே உங்களை பத்தி புகார் செய்வோம். நீங்கள் ஒருதலைபச்சமாக ஆரம்ப முதல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை எடுத்து வைப்போம் என்றார். அனைத்தையும் சட்டரீதியாக செய்து காட்டுவோம். எங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் எப்படி எங்களை நெருக்கடி கொடுக்கீறீர்கள் என்பதை நாங்கள் நிரூப்போம். தேர்தல் அதிகாரி தேர்தலை நிறுத்துகிறோம் என்று சொல்லமா என்று கலெக்டரிடம் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருக்கிறார். 

 



ஆக கரூர் தேர்தலை நிறுத்துவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்து விட்டார். ஆனாலும் நிறுத்த விடமாட்டோம் என்று திமுக தரப்பில் கடுமையான சட்டப்போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு தேர்தல் நடந்தாலும் அதற்கு என்ன வேண்டுமானலும் நடக்கும் என்பது தான் தற்போதையை நிலை !.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.