Advertisment

ஈரம் காயும் முன் அடுத்த சோகம்... கரூரில் பிளஸ் டு மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை!

karur 12th student incident viral

அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியர்மிதுன்சக்ரவர்த்தி கைதுசெய்யப்பட்ட நிலையில் பெற்றோர்கள், உறவினர்கள்மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கரூரில் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாகதற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

karur 12th student incident viral

கரூர்வெண்ணைமலைபகுதியில்தனியார்பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (19.11.2021) பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்குபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாகவெங்கமேடுபோலீசார்வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். கோவைசம்பவத்தைப்போலவே இந்த மாணவியும் பாலியல் தொல்லைகாரணமாகத்தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகத்தற்கொலை செய்துகொண்டமாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் 'பாலியல் தொல்லையால்உயிரிழந்தகடைசிபெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவஎடுக்க வெச்சான்னுநான் சொல்ல பயமா இருக்கு' எனஉருக்கமாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை மாணவி தற்கொலை சம்பவத்தின் ஈரம் காயும் முன்னே மீண்டும் இப்படியொரு சம்பவம் கரூரில் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police incident karur kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe