Skip to main content

94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் வலியுறுத்தல்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018


 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
 

இவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 


2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும்  இதுவரை 94,000 பேர் பணி கிடைக்காமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கபெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கின்றனர். 


கடந்த ஐனவரி மாதம் அரசிடமிருந்து 2013 தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது இன்று வரையிலும் செயல்வடிவம் பெறாமல் இருப்பதும், அதே வேளையில் தற்சமயம் 01:03:2018 அன்று புதியதாக ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தப்படும் என்று  சொல்வது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தையும் மன உளைச்சலையும்  ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஒட்டு மொத்த தேர்வர்களின் பணி நியமனம் குறித்த எதிர்பார்ப்பும் கேள்வி  குறியாக உள்ளது.
 

தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காத சூழலில் மீண்டும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுத சொல்வது என்பது தவறான நிலைப்பாடாகும். அது மடடுமல்லாமல் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு எழுத சொல்வது ஜனநாயக முறைக்கு எதிரானதாக  உள்ளது. 
 

எனவே அரசு அறிவித்தபடி2013ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தற்சமய பணியிடங்களை வழங்கி இந்த அரசு 94,000 பேரின் வாழ்வாதாராத்தை காத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கியால் சுட அனுமதி கொடுத்ததுயார்?  சட்டசபையில் தமிமுன்அன்சாரி காட்டம்!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018
annnnn

 

மனிதநேய ஜனநாயக கட்சி-யின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி_MLA இன்று சட்டமன்றத்திற்கு சென்றபோது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்றார்.

 மேலும் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 தியாகிகளின் படம் பொறித்து "இவர்களை சுட உத்தரவிட்டது யார்"? "தியாகிகளின் ரத்தம் வீண் போகாது"!  என்ற வாசகம் அடங்கிய பேனரை தூக்கிப் பிடித்து மஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.


சட்டமன்றம் கூடி, கேள்வி - பதில் நேரம் முடிந்தபிறகு, அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மாத்தின் மீது பேசினார்.

 அவருக்கு பிறகுதான் மாண்புமிகு உறுப்பினர்கள் தினகரன் எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் , காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் K.R ராமசாமி அவர்களும் பேசினார்.

 சட்டசபையில் மு.தமிமுன் அன்சாரி  பேசும்போது அவை முழு அமைதி காத்தது.  முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கூர்ந்து கவனித்தனர்.

 அவர் பேசியதாவது…

கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைப்பெற்றது. அதனால் ஜெயலலிதா உயிரைச் கொடுத்து உருவாக்கிய, இந்த அரசுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன்.

நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசானை காலதாமதமாக வந்தது என்றாலும், அதை வரவேற்கிறேன். இதை முன்பே செய்திருந்தால் 13 உயிர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம் என்பது பரவலான கருத்து.

 என்ன இருந்தாலும், இந்த அரசானையை அமைச்சரவையை கூட்டி, அல்லது சட்டமன்ற தீர்மானமாக மாற்றினால் அது அந்த மக்களுக்கு நிரந்தரமாக நிம்மதியை கொடுக்கும்.

  இப்போது, அங்கு நடைப்பெற்ற துப்பாக்கி சூடு சம்பந்தமாக, தமிழக அரசு உரிய நியாயமான விளக்கங்களை அளிக்கவில்லை என்பதால் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
  அங்கு காவலர்கள் தாக்கப்பட்டது, வாகனங்கள் தாக்கப்பட்டது ஆகியவற்றை முதலில் இங்கு கண்டிக்கிறேன். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

1. அங்கே மக்கள் பெரும் அளவில் கூடுவது குறித்து உளவு அமைப்புகள் அரசுக்கு முறையான எச்சரிக்கையை கொடுத்தா? என அறிய விரும்புகிறேன்.

2. ஆர்ப்பாட்டக்காரர்கள் திரள்வதை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஏன் தடுக்கவில்லை?

3. தண்ணீரை பீச்சியடிக்கும் 'வஜ்ரா' வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி அந்த கூட்டத்தை கலைத்திருக்க முடியும். உலகமெங்கும் நடைபெறும் மக்கள் போராட்டத்தை அவ்வாறுதான் கலைக்கிறார்கள். இதை BBC, CNN , AL JESIRAA, போன்ற தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.

4. ஆனால் விதிகளை பின்பற்றாமல், துணை தாசில்தார்கள் துப்பாக்கி சூட்டுக்கு ஆணை பிறப்பித்ததாக இன்று இந்து பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது (பத்திரிக்கையை தூக்கி காட்டுகிறார்) இது தான் மரபா ?

5. சீருடை அணியாத காவலர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் பத்திரிக்கையில் வந்துருக்கிறது. தெருக்களில் சென்று  கைத்துப்பாகியால் சுட யார் அனுமதி கொடுத்தது?

7. மக்கள் உணர்வுகளால் கொந்தளிக்கும் போது அவர்களை அமைதி படுத்துவதுதான் அதிகாரவர்க்கத்தின் பொறுப்பு, அவர்களை காக்கை - குறுவிகளை போன்று சுடுவது நியாமா?  

என்ற கேள்விகளோடு இந்த அவையின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன்.’’என்றார்.

Next Story

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
mla


விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகின்றனர்.

ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், வார விடுமுறையாக வியாழன் அறிவித்தல், உலக இந்து தினத்தை அறிவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உத்தரபிரதேசத்தில் ரத யாத்திரை துவங்கியது. மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வரும் ரத யாத்திரை மார்ச் 20ல் ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பின் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவில் இருந்து தமிழகம் வரவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. யாத்திரை மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.