Skip to main content

சட்டமன்றம் அல்ல... வெட்டி மன்றம்...: எடப்பாடியை தாக்கும் கருணாஸ் 

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.


 

karunas



 

 

 

இதில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ்,

 

எந்த வித உரிமைகளும் இல்லாத அந்த மன்றம் எதுக்கு? அது சட்டமன்றம் அல்ல வெட்டி மன்றம். அவர்களே அவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் செய்தேன், நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்னால் உங்க வீட்டில் இருந்து எடுத்து வந்த பணத்திலா அதை செய்திர்கள்? ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை அது.

 

உங்களை எதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் மக்கள். மக்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான். செயல்படுத்த தவறியவர்களை கேள்வி கேட்டகூடாது என்று சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம். ஆக நான் இன்றைக்கு இந்த இடத்தில் வந்துவிட்டேன் என்பதற்காக அவர்களை குறைசொல்லவில்லை. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிகொண்டு தான் இருக்கிறேன்.

 

இதுவரை 182 மனுக்கள் தொகுதி சார்பாக நான் கொடுத்து இருக்கிறேன். இரண்டே இரண்டு மனுக்கள் மட்டும் தான் பரிசீலனை செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்ககூடிய அதிமுகவின் நிர்வாக நிலை.முழுக்க முழுக்க வியாபாரிகள் ஒன்றாக சேர்ந்து ஒன்று நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது.

 

 

 

தொகுதிக்கு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு இல்லை. பலமுறை சொல்லி இருக்கிறேன். தவறான தகவல்களை சொல்கிறார்கள். கடந்த குருஜெயந்திக்கு முதலமைச்சர் வருகின்ற பொழுது நான் அங்கு அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். எதிர்கட்சி தலைவரையும் வரவேற்றேன். ஆனால் அன்றைக்கு உளவுத்துறை சொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல். என்ன தெரியுமா? நான் முதல்வர் வருவதை தடுக்க போகிறேன். நான் முதல்வரை என் ஆட்கள் கொண்டு அடிக்க போகிறேன் என்கின்ற தகவலை தான் தமிழ்நாடு உளவுத்துறை கொடுத்தது. நடக்காதது ஒன்றை இல்லாத ஒன்றை சொல்லக்கூடிய அதிகாரி முதல்வர் இடத்தில் இருக்கிறார். உண்மையை சொல்வதற்கு யாரும் இல்லை. மக்களை காப்பற்றுவதற்கான அதிகாரி யாரும் இல்லை. அரசு செய்யகூடிய தவறுகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லகூடிய அதிகாரிகள் தான் அங்கு இருக்கிறார்கள்.

 

karunas

 

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பணியை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்தி கொடுக்காத அரசு தேவையா? இதுதான் என்னுடைய கேள்வி? செயலற்ற அரசாக மக்களுக்கு பணிகள் செய்யமால் இருக்ககூடிய அரசு தேவையா? இதுதான் தமிழர்களின் ஒட்டுமொத்த கேள்வியாக இருக்கிறது. ஆகவே மக்களுக்கான ஒரு ஆட்சி, மக்களை குறைகளை போக்ககூடிய ஒரு ஆட்சி, மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்சி, மக்களின் உரிமைக்களுக்காக போராடக் கூடிய ஒரு ஆட்சி, மக்களுக்காக மக்களுடனேயே வாழ்ந்து காட்ட கூடிய ஒரு ஆட்சி இந்த தமிழகத்தில் வேண்டும். அது ஸ்டாலின் தலைமையில் உருவாக வேண்டும். என்பது தான் என்னுடைய ஆசை. என்னுடைய ஆவல். அன்றைக்கு எனக்கு சட்டமன்ற வாய்ப்பு கிடைத்து விடும் என்பதற்காக அல்ல. நான் மிகமிக ஆர்வபட்டுவந்தேன். நடப்பதை எல்லாம் பார்த்தேன். போதும்.

 

கூவத்தூரில் ஏற்பட்ட அவமானங்கள் போல வேற எந்த அவமானமும் எனக்கு ஏற்படப்போவதில்லை. யார் ஒருவரும் என்னை பார்த்து விரல் நீட்டி பேசியது கிடையாது. ஆனால் அத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன்.

 

 

 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்க கூடிய நிர்வாகம் சரியில்லை. தலைமை சரியில்லை. ஒரு வீட்டில் கணவன் சரியில்லை என்று சொன்னால் அதன் முழு பொறுப்பு அந்த குடும்ப தலைவனுடையது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. உள்ளாட்சி கட்டமைப்பு இல்லை. மாவட்ட ஆட்சியாளர்கள் மந்திரிகளுக்கு தலை சாய்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை அமர்த்தி கொள்கிறார்கள்.

 

எதற்காக என்று கேட்டால் மணல் அள்ளுவதில்தான் அதிகமாக பணம் இருக்கிறது என்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் என்னிடத்தில் இருக்கிறது. நானே பேசியிருக்கிறேன். ஆதாரத்தை கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. முதலமைச்சரிடத்தில் புகார் கொடுத்துட்டா, முக்குலத்தோடர் புலிப்படைக்கு அமைச்சர் பதவி கொடுத்துருவாங்களா? என்று கேட்கின்றனர். இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.