Skip to main content

மேடைக்கலைஞர்களுக்கு தலா ரூ.5000 வழங்க வேண்டும்... நிவாரண உதவி அளித்து கருணாஸ், கிரேஸ் கருணாஸ் கோரிக்கை!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

மேடை பாடகர்கள்  மற்றும்  மேடை கச்சேரி  தொழிட்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் கருணாஸ் – பாடகி கிரேஸ் கருணாஸ் கரோனா நிவாரண உதவி வழங்கினர். மேடைக்கலைஞர்களுக்கு 5000 ரூபாய் தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  


கரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள சூழலில், மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் என மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். பலருக்கு கிடைக்கும் நிலையும், சிலருக்கு கிடைக்காத நிலையும் இருக்கத்தான் செய்கிறது.

 


 

 Karunas

                                       


அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மேடை கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த மேடைப்பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கரோனா பாதிப்பு நிலையில் எந்த நிகழ்வுகளும் இல்லாமல் முடங்கி விட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது.
 

 nakkheeran app


ஆகவே, மேடைக்கச்சேரியை தமது வாழ்க்கையின் அடித்தளமாக கொண்டு முன்னேறியவர்கள் நடிகர் கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் ஆவர். மேடைக்கச்சேரிகளில் பாடிக்கொண்டு பின்னர் படிப்படியாக திரைப்பட பாடகியாக புகழ்பெற்றவர் கிரேஸ் கருணாஸ். அதேபோல்தான் நடிகர் கருணாஸ் அவர்களும். தற்போது கருணாஸ் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், பலபடங்களில் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து இயங்குகிறார்!

தமது பழைய பாதையை எப்போதும் மறக்காதவர்களாய்… இருப்பதால்,  கரோனாவால் பாதிப்படைந்திருக்கும் மேடைக்கச்சேரிக் கலைஞர்களுக்கு நடிகர் கருணாஸ் - கிரேஸ் கருணாஸ் இருவரும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். அதில் முதற்கட்டமாக 500 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளனர்.
 

Ken Karunas

                                             பி.ஆர்.ஓ. சங்கத்திற்கு நிதி உதவி அளித்தபோது 



இதுபோல் தமிழ்நாடெங்கும் வாழும், நாட்டுபுற பாடகர்கள், மேடைக்கச்சேரி பாடகர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் என 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இச்சூழலில் உதவவேண்டியது அரசின் கடமையாகும்.
 

ஒரு நாட்டின் உன்னதக் கலைஞர்களையும், அதன் பண்பாட்டு அடையாளங்களையும் அடுத்தடுத்து எடுத்து செல்கிறவர்கள் இதுபோன்ற இசைக் கலைஞர்கள் ஆவர். அவர்களை பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே அவர்களுக்கு ஆளுக்கு தலா ரூ. 5000 ஆயிரம் கரோனா நிதியாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என நடிகர் கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.

Next Story

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.