கருணாஸ் ஜாமீன் மனு விசாரிப்பு! நாளை உத்தரவு!

karunas

அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடனை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

அதன்பின் எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

karunas

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நேற்றுஅவரைகாவலில்எடுத்து விசாரிக்க காவல்துறை நீதிமன்றத்தில் கோரியிருந்தது. அந்த கோரிக்கைதள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் காவிரி விவகாரத்தில்கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடியது தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. இந்நிலையில் கருணாஸ் ஜாமீன் மனுமீதான உத்தரவைநாளை பிறப்பிக்க இருப்பதாக எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருணாஸ் ஜாமீன்மனுமீதான இருதரப்பு வாதங்களை விசாரித்து முடித்த நிலையில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை நாளை வழங்குவதாக அறிவித்தார்.

arrest court Egmore karunas police
இதையும் படியுங்கள்
Subscribe