Skip to main content

வெளிநாடுகளில் சொத்து தொடர்பான வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் ப.சி.யின் மனைவி, மகன், மருமகள் ஆஜர்

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
Karti Chidambaram


வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்து, வருமான வரி செலுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி உள்ளிட்ட 3 பேர் மீது வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் இன்று ஆஜராகினர்.

படங்கள்: குமரேஷ்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”பாஜக அரசு மிரட்டி பணம் பறித்திருக்கிறது" -கார்த்திக் சிதம்பரம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
BJP government has misused power to extort money says Karthi Chidambaram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றதில் பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்திருக்கிறது. லாபமே இல்லாத கம்பெனிகள் எல்லாம் இவ்வளவு நிதி நன்கொடையாக கொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதில் யார் நன்கொடை கொடுத்தார்கள் யார் பெற்றார்கள் என்பதை மட்டும் விசாரிக்காமல்   இதன் பின்னணியையும் விசாரிக்க வேண்டும். மேலும்  இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி விசாரணை கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் “ஒரே நாடு ஒரே தேர்தல் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றரை மாதம் நடத்துகிறார்கள். மோடியின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அந்த  பயணத்தை அடிப்படையாக கொண்டே தேர்தல் தேதிகளை அமைத்து இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக ஒரே நாளில் தேர்தலை நடத்தலாம் நமது நாட்டில் அதற்கான கட்டமைப்பு இல்லையா? ஈரான் ,ஈராக் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை ஒன்றிணைத்த அகண்ட பாரதத்தில் வேண்டுமானால்  400 தொகுதிகளை ஜெயிப்பதாக பாஜக கனவு காணலாம்.

பாஜக என்பது ஹிந்தி இந்துத்துவா கட்சி ஹிந்தி பேசாத மாநிலங்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செல்வாக்கே கிடையாது. தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக  இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

‘கண்டா வரச் சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க...! - அதகளப்படும் சிவகங்கை சீமை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
poster criticizing karti chidambaram has been circulated in Sivaganga

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் கடந்த முறை கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தொகுதி திமுகவினர் போர் கொடி தூக்கியுள்ளனர். 

கடந்த தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். ஆனால் அவர் கூட்டணி தொண்டர்களை கண்டுகொள்வதில்லை என்றும், அப்பகுதி மக்களுக்கு எதுவும் பயன் உள்ள வகையில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வினரும், அப்படி ஒதுக்கினால் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்றும் அவரது சொந்தக்கட்சியினரே முனுமுனுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் சிவகங்கை தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க...! நெட்ப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டும், சமூக ஊடகங்களில் மோடியைப் புகழ்ந்து கொண்டும், தொகுதியை மறந்து சுற்றித் திரியும் அவரை(கார்த்தி சிதம்பரம்) கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.