ADVERTISEMENT

கார்த்திக் சிதம்பரம் திருச்சி எம்.பி. சீட்டுக்கு சிபாரிசு பண்ணும் பெண் பிரமுகர்!

10:51 AM Mar 20, 2019 | Anonymous (not verified)

திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சீட்டுக்காக இந்த திருச்சியில் 4 முறை எம்.பியாக இருந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லுயிஸ் திருச்சி லோக்கல் மா.செ. கே.என்.நேரு துணையோடு கடுமையாக சீட்டுக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினால் தமிழக அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.திமுக, பிஜேபியில் மத்திய மந்திரி, காங்கிரஸில் மாநில தலைவர் என்று போகிற கட்சிகளிலில் எல்லாம் முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த திருநாவுக்கரசர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் இந்த முறை தனக்கு தான் சீட்டு ராகுல்காந்தியே திருச்சி தொகுதியை சிபாரிசு பண்ணிட்டார் என்கிற அளவுக்கு தைரியமாக இருக்கிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் அடிக்கடி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கி கொஞ்ச நேரம் அவர்களின் ஆதரவாளர்களிடம் பேசிவிட்டு காரில் சிவகங்கைக்கு செல்வது வழக்கம் சமீப காலமாக அடிக்கடி திருச்சி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்போது திருச்சியில் உள்ள சிதம்பரம் அணியை சேர்ந்த முன்னாள் மேயர் சுஜாதா, ஆர்.சிபாபு, திருச்சி சார்லஸ், ஜி.எம்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் எப்போதும் சந்தித்து பேசுவது வழக்கம்.

இந்த முறை திருச்சி விமானநிலையத்திற்கு வந்த கார்த்திக் சிதம்பரம். முன்னாள் மேயர் சுஜாதாவிடம் என்னமா நீங்க சீட்டுக்கு அப்ளே பண்ணுங்க. என் கிட்ட ஒரு பார்மட் இருக்கு அதையும் தரேன் அதையும் சேர்த்து அப்ளே பண்ணுங்க. என்று சொல்லவும்.. சரிங்க சார்.. பண்றேன் என்று சொல்லவும். உடனே அருகில் இருந்த ஆர்.சி.பாபு அப்படியா எல்லா பேசி முடிச்சாச்சா. அதானே பாத்தேன் என்று நக்கலாக சண்டை போட. அதிர்ச்சியடைந்த முன்னாள் மேயர் சுஜாத்தா இல்லண்ணே ! பெண்கள் கோட்டாவில் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்கு அதான் அப்ளே பண்ண சொல்றாங்க, என்கிட்ட எம்.பி. சீட்டுக்கு செலவு பண்ற அளவுக்கு பணம் இல்லண்ணே! . நா சும்மா என் பேருக்கு விருப்ப மனு மட்டும் கட்டுவேன் என்று சொல்லி மழுப்பியிருக்கிறார். ஆனால் திருச்சியில் உள்ள சிதம்பரம் ஆதரவாளர்கள் நம்ப தயாராக இல்லை.

கார்த்திக் சிதம்பரம் போகிற போக்கில் போட்ட குண்டு தற்போது திருச்சியில் பயங்கரமாக புகைந்து கொண்டு இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT