Skip to main content

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.ஜி!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் வெடித்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி, கோயிலுக்குள் ஆய்வு நடத்தினார்.

 

karthigai-deepam-festival-police issue

 

 

அப்போது கோயில் சார்பில் நகர காவல்நிலையத்தில் கோயிலுக்குள் சுற்றி திரியும் புரோக்கர்கள் குறித்து 15 பேர் கொண்ட பட்டியல் இணைத்து புகார் தரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்தது காவல்துறை. மற்றவர்களை தேடி வருவதாக சொன்னது காவல்துறை. அந்த புரோக்கர்கள் பின்னர் நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் பெற்றனர் எனக்கூறப்பட்டது. அந்த வழக்கை அப்படியே நீர்த்து போக வைத்துவிட்டனர் போலீஸார்.  

இந்நிலையில் டிசம்பர் 10ந்தேதி மாலை மகாதீபத்தன்று, கோயில் சார்பில் புரோக்கர் என புகார் தரப்பட்ட மூன்று பேர் கோயிலுக்குள், கோயில் பணியாளர்கள் என்கிற அட்டை பாஸ் வைத்துக்கொண்டு உள்ளே வந்திருந்தனர். அதில் இருவர் சாமி தூக்கிக்கொண்டு இருந்தனர். ஒருவர் மைக் கையில் வைத்துக்கொண்டு கூட்டத்தை சரிப்படுத்திக்கொண்டும், காவல்துறைக்கு ஒத்தொழைப்பு தரவேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துக்கொண்டு இருந்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் தலைமையில் கோயில் பிரகாரத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அப்போது, கொடிமரம் முன்பு நின்றுயிருந்த கோயில் சார்பில் புரோக்கர் எனச்சொல்லி புகார் தரப்பட்ட மிக முக்கிய புரோக்கர் ஒருவரிடம், ஐ.ஜீ ஆலோசனை கேட்க, சாமி எப்படி வரும், என்ன செய்ய வேண்டும் எனச்சொன்னார். அவர் சொன்னதை கேட்டு அதற்கு தகுந்தார் போல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தினார் ஐ.ஜி. இதனைப்பார்த்த உள்ளுர் பக்தர் ஒருவர், நம்மிடம் கோயிலில் எத்தனையோ பணியாளர்கள் உள்ளார்கள், அதிகாரிகள் உள்ளார்கள், விவரம் அறிந்த காவல்துறையினர் உள்ளார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டுயிருக்கலாம், புரோக்கர் ஒருவரிடம் உயர் அதிகாரி ஆலோசனை கேட்பது சரியா என அதிர்ச்சியோடு புலம்பினார்.

தீபம் ஏற்றி முடிந்தவரை அந்த புரோக்கரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அவர் தமிழகத்தில் ஓரளவு பிரபலமானவர்களை சந்தித்து, தன்னால் அண்ணாமலையார் கோயிலுக்குள் உங்களுக்கு தேவையானது செய்து தர முடியும் எனச்சொல்லி அவர்களை இங்கு அழைத்து வருகிறார். அப்படி அழைத்து வரும்போது, இங்குள்ள சிவாச்சாரியர்கள், அதிகாரிகளை பணத்தால் குளிப்பாட்டுகிறார். கோயில் இணை ஆணையர் ஞானசேகரே, அந்த புரோக்கர் சொல்வதற்கு மறுப்பேச்சு பேசாமல் தலையாட்டுகிறார். அவரே பவ்யமாக தலையாட்டும்போது, மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள், அதனால் தான் கோயிலில் இவ்வளவு செல்வாக்கு என்கிறார் கோயிலில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.