ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும்சோதனை நடைபெற்றிருந்தது. ஆனால் அன்றைய தினம்வீட்டின் ஒரு அறையில் மட்டும் சோதனை நடத்த முடியாதநிலை ஏற்பட்டது.இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இல்லத்தில் அந்த குறிப்பிட்ட ஒரு அறையில் சிபிஐயைசேர்ந்த 7 அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்பொழுது அந்த சோதனையானது நிறைவு பெற்றுள்ளது.

Advertisment