Skip to main content

கர்நாடகாவில் குறையும் கரோனா தொற்று!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021
gh


கர்நாடகாவில் இன்று 6,835 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  15,409 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 25,66,985 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,71,434 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை  1,72,141 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 120 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 33,033 பேர் பலியாகியுள்ளனர்.  கடந்த 30 நாட்களுக்கு முன்பு வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தினசரி பாதிப்பு இருந்த நிலையில், அது தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களாக கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளே கரோனா குறைவதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்