பார்ப்போரை பதறவைக்கும் அந்த வீடியோ, கர்நாடக மாநிலம் – பெங்களூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

அந்த வீடியோவில் பதிவான காட்சி இதுதான் –

12 வயது மதிக்கத்தக்க மகனை, வீட்டில் உள்ள சீலிங் ஃபேனில், தந்தையே சேலையில் கட்டப்பட்ட தூக்கில் மாட்டி தொங்கவிடுகிறார். சிறுவனைக் காப்பாற்ற அவன் தாயும், சகோதரியும் மன்றாடி கதறுகின்றனர். அதைப் பொருட்படுத்தாத தந்தை துடிக்கத்துடிக்க மகனைத் தூக்கில் மாட்டி கொன்றுவிடுகிறார்.

Advertisment

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தேறியவுடன், மகனின் இறப்பைத் தாங்க முடியாத தாய் பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும் கூச்சலைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, மகனைக் கொலை செய்த கொடூரத் தந்தை சுரேஷைக் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடன் பிரச்சனை தந்த நெருக்கடியால், குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார் சுரேஷ்.

மனைவி மற்றும் மகள் கண்முன்னே, பெற்ற மகனைத் தந்தையே தூக்கிலிட்டுக் கொலை செய்திருப்பதை என்னவென்று சொல்வது! ‘அட, கொடுமையே! இப்படியெல்லாம்கூட நடக்கிறதே!’ என்று நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது.

Advertisment