Skip to main content

கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் - திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

இந்தியாவில் தேசப்பற்று என்ற தலைப்பில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஹெர்போ கேர் டிரஸ்ட் சார்பில் ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் நவீன் பாலாஜி இந்த நிகழ்ச்சியை நடத்தினார். முன்னதாக ஹெர்போ கேர் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
 

தேசப்பற்று பாடல்களுடன் பரதநாட்டியத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹெண்டே, நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் சுல்தான், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத், திருவள்ளூர் மாவட்ட திமுக துணை செயலாளர் கதிரவன், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ முருகன், செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முகமது ஹிதயதுல்லா, காங்கிரஸ் துணைத் தலைவர் அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் முகமது முனீர் மற்றும் ராமசுப்புரமணியம், ஷாஹ்னாவாஸ் கான், ஜான் சத்தியகுமார், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற, விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத்சிங் குடும்பத்தினருக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மருத்துவர் நவீன் பாலாஜியை கேட்டுக்கொண்டனர். வரும் காலங்களில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் அளிப்பதை லட்சியமாக கொண்டிருக்கும் மருத்துவர் நவீன் பாலாஜியை மனதார பாராட்டுவதாகவும், அவரது சேவைகள் தமிழக மக்களுக்கு தொடர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். 
 

இந்த நிகழ்ச்சியில் மாணவி சுபானு என்பவர் யோகாசனம் செய்தார். இதனை இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன், திருச்சி வேலுசாமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைவரும் வியந்து பார்த்தனர். மாணவி சுபானுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 
 

மாணவி சுபானு யோகாவிற்காக ஐ.நா. சபை மற்றும் உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தனக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அதற்காக மருத்துவர் நவீன் பாலாஜியிடம் சிகிச்சை பெற்று பலன் அடைந்ததாகவும், தற்போது எளிமையாக யோகா செய்து வருவதாகவும் தெரிவித்தார் சுபானு. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.