Skip to main content

கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் - திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

இந்தியாவில் தேசப்பற்று என்ற தலைப்பில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஹெர்போ கேர் டிரஸ்ட் சார்பில் ஹெர்போ கேர் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் நவீன் பாலாஜி இந்த நிகழ்ச்சியை நடத்தினார். முன்னதாக ஹெர்போ கேர் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
 

தேசப்பற்று பாடல்களுடன் பரதநாட்டியத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹெண்டே, நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் சுல்தான், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத், திருவள்ளூர் மாவட்ட திமுக துணை செயலாளர் கதிரவன், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ முருகன், செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முகமது ஹிதயதுல்லா, காங்கிரஸ் துணைத் தலைவர் அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் முகமது முனீர் மற்றும் ராமசுப்புரமணியம், ஷாஹ்னாவாஸ் கான், ஜான் சத்தியகுமார், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பங்கேற்ற, விடுதலைப் போராட்ட வீரர் தியாகி பகத்சிங் குடும்பத்தினருக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மருத்துவர் நவீன் பாலாஜியை கேட்டுக்கொண்டனர். வரும் காலங்களில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் அளிப்பதை லட்சியமாக கொண்டிருக்கும் மருத்துவர் நவீன் பாலாஜியை மனதார பாராட்டுவதாகவும், அவரது சேவைகள் தமிழக மக்களுக்கு தொடர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். 
 

இந்த நிகழ்ச்சியில் மாணவி சுபானு என்பவர் யோகாசனம் செய்தார். இதனை இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன், திருச்சி வேலுசாமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைவரும் வியந்து பார்த்தனர். மாணவி சுபானுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 
 

மாணவி சுபானு யோகாவிற்காக ஐ.நா. சபை மற்றும் உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தனக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அதற்காக மருத்துவர் நவீன் பாலாஜியிடம் சிகிச்சை பெற்று பலன் அடைந்ததாகவும், தற்போது எளிமையாக யோகா செய்து வருவதாகவும் தெரிவித்தார் சுபானு. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.