Skip to main content

‘இதோடு நிறுத்திக்கணும்’- சீமானை எச்சரித்த கராத்தே தியாகராஜன்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

karate thiyagarajan


‘அகவன்’ என்னும் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கராத்தே தியாகராஜன், “ என்னுடைய நண்பர் ரவி நீண்ட காலமாக இந்த படத்தை வெளியிட இருக்கிறார்கள். தற்போது நண்பர் அன்புவின் உதவியால் இந்த படம் வெளியிட இருக்கிறார்கள். எனக்கு அன்புவை நேரடியாக தெரியாது அவரிடம் பேசியதுமில்லை, அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை அன்பு மீது குற்றச்சாட்டு ஒன்று வந்தது, அப்போது தயாரிப்பாளர் தானுவிடம் தொடர்புகொண்டு அன்பு யார் என்று கேட்டேன். அவர் சொன்னார், தமிழ் சினிமா அவரை பயன்படுத்திக்கொண்டால் மிகப்பெரிய அளவில் முன்னேறும். அன்பு ஒருவர்தான் ஒரு செக்கை வைத்துகொண்டும், ஒரு சிடியை வைத்துகொண்டு ஃபைனான்ஸ் தருபவர் என்றார். அப்படிபட்ட அன்பு, ரவிக்கு உதவி செய்திருக்கிறார்.” என்று கூறினார்.
 

மேலும் ரஜினி குறித்து பேசியவர், “ தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாநிலத்தில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்க சூப்பர் ஸ்டார் வருவார். அவருக்கு தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் உதவியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களின் இடத்திற்கு கண்டிப்பா பலர் வருவார்கள். அண்ணன் ஸ்டாலின் கூட மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஆனால் இறுதியான இடத்திற்கு இரண்டு பேர் வரவேண்டும். அதில் அண்ணன் ரஜினியும் வருவார். சினிமா மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன். ஆனால், சிலர் சினிமா லாஞ்சில் அரசியல் பேசுகிறார்கள். நண்பர் சீமான் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகப்பெரிய படை உடையவர். அவரை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பாடல் வெளியீடு நிகழ்ச்சியில் எச்சரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.