Skip to main content

கரகாட்ட கலையைக் கெடுக்கும் கயவர்கள்... கடும் நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு?

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்றான கரகாட்டம் சில ஆண்டுகளாக அதன் கலைநயத்தை இழந்து கவரச்சி நடனங்களாக மாறியதோடு, ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றிருப்பது கலைகளை வளர்க்கும் கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.
 

கடந்த சில வாரங்களாக நாட்டுபுற கலைஞர்களின் வாட்சாப் இணைப்புகளின் இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகிவருகிறது. அந்த வீடியோக்களின் மூன்று கரகாட்டக்கார பெண்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் இருந்தது. கணவன் - மனைவிக்கு இடையே அறையில் நடக்கும் இல்லர சம்பவங்கள் இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் சிலர்கூடி நின்று பார்க்கும் விழாகூட்டத்தில் செய்திருப்பது வேதனையின் உச்சமே.

 

Karakattam


 

அந்த வீடியோக்களோடு, இனி ஆபாசமாக கரகாட்டம் ஆடும் ஆட்டக்காரர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும், தடைவிதிக்கவேண்டும் என  நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களின் நல சங்கத்தினர் தீர்மானம் கொண்டுவந்து, அதனை நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரிடமும்  புகார் அளிப்பதற்காக தயாராகி வருகின்றனர்.
 

இது குறித்து கலைத்தாய் அறக்கட்டளையின் கிங்பைசலும், நாட்டுப்புற கலைஞர்களின் நலசங்க தலைவர்களில் ஒருவரான புத்தூர் ரவியும் கூறுகையில், "நையாண்டி மேளத்தின் இசைக்கு ஏற்ப உடம்பை வளைத்து தங்களின் அசைவுகளினால், தலையில் உள்ள கரகம் கீழே விழாமல் ஆடுவதுதான் கரகாட்டம். சங்க காலத்தில் சிலப்பதிகாரத்திலேயே அதைப்பற்றி இளங்கோவடிகள் எழுதியிருக்கின்றார். தமிழ் கடவுள்களை ஒவ்வொரு உருவத்தில் மக்கள் வழிபாடு செய்கிறார்கள். அதுபோல் அம்மனை வழிபாடு செய்யும்முறைதான் இந்த கரகம். ஆம். மாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழாவின்போது. மேலதாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்று நீரை குடத்தில் எடுத்து வேப்பிள்ளை, பூக்களால் அந்தக் குடத்தை அலங்கரித்து பிறகு மஞ்சள், குங்குமம் வைத்து அதை அம்மனாக நினைத்து தலையில் சுமந்து வந்து தீ மிதித்து அந்த நீரை அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.


 

இது காலங்காலமான நடைமுறை. அதை கொஞ்சம் கொஞ்சமாக தலையில் வைத்து ஆடுவதற்கு பூசாரிகள் ஆண்களாகதான் இருக்க வேண்டும் என ஆணாதிக்கம் துவங்கியது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பதால் ஆண்தான் கரகம் ஆடவேண்டும்  என்றனர்.
 

காலப்போக்கில்  அதை ஆடும் கலையாக மாற்றி நவதானியங்களை குடத்தில் வைத்து பக்கியோடு ஆடி வந்தார்கள். தற்பொழுது அதில் மண்ணை வைத்து ஆடுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. கிராமியக்கலையில் குறவஞ்சி என்னும் நடனத்தை ஆடுபவர்கள் குறவன், குறத்தி வேடமிட்டு நாட்டுப்புற பாடல்களைப் பாடி இலைமறைவு ஆபாசமாக பேசியும் ஆடியும் வந்தபொழுது பெண்கள் இந்த கரத்தை வைத்து ஆட ஆரம்பித்தார்கள். அப்போது புடவைகட்டி ஆடினார்கள், பிறகு சுருவால், பரத நாட்டிய ஆடை, மாராப்பு அனிந்து உடலை மறைத்து மரியாதையாக ஆடினார்கள். ஆனால் காலப்போக்கில் ஆபாசம் தலையெடுத்து இளைஞர்களையும் சிறுவர்களையும் ஏன் வயதானவர்களையும் கவரும் வகையில் ஆடைகளை அரைகுறையாக அணிந்து ஆடத்துவங்கினார்கள்.


 

கடந்த 15 ஆண்டுகளில் தஞ்சை, சேலம் போன்ற கலைஞர்கள் நிறைந்த ஊர்களில் புரோக்கர்கள் பெண்களை பணம் கொடுத்து அடிமைகளாக வைத்துக்கொண்டு இதுபோல் அறுவெறுக்கும் வகையில் கலையை ஆபாசமாக மாற்றிவிட்டனர். ஆடல் பாடலை தடைசெய்ததும் அதில் இருந்த பெண்களை இந்தக்கலையில் புகுத்தி ஆபாசமாக ஆடவிட்டு சம்பாதிக்கின்றார்கள். இதற்கு முழுகாரணம் புரோக்கர்களே. அவர்கள் மீதுதான் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 

பழம்பெறும் கரகாட்டகலைஞர்கள், மதுரை ஓம்பெரியசாமி, கும்பகோணம் அன்னியூர் சண்முகம், நாகை மாவட்டம் தலைஞாயிறு மாரிமுத்து, தஞ்சை தேன்மொழி, தமிழ்ச்செல்வி போன்றோர்கள் கரகாட்டத்தை தலைநிமிரச்செய்து பட்டங்களை பெற்றாலும், இதுபோன்று கலையை கெடுக்கும் கூட்டத்தால் அனைவருக்கும் தலைக்குனிவாகிறது.   பாரம்பரியத்தை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என  நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சார்பாக முதற்கட்டமாக புகார் அளிக்க இருக்கிறோம்" என்கிறார்கள் ஆவேசத்துடன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.