Skip to main content

மக்களை தேடிச் செல்லும் கபசுரக் குடிநீர்; ஆர்வமாக கொண்டு செல்லும் காவல்துறையினர்!!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கரோனா வைரஸ் விவகாரம்  ஒட்டுமொத்த உலகையும் உருகுலைய வைத்துவருகிறது. ஒன்றுமறியாத கிராமப்புற மக்களும் செய்வதறியாமல் கையறு நிலையில் விழிபிதுங்கி முடங்கிக் கிடக்கின்றனர்.


இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் இளைஞர்கள் என தாமாகவே முன்வந்து உதவ நினைத்தாலும், அவர்களுக்கான கரோனா அச்சம் அதை தடுத்து நிறுத்தியே வருகிறது. அதையும் மீறி சில மனிதநேயமிக்கவர்களும், அரசியல் பிரபலங்களும், காவல்துறையினரும் ஆங்காங்கே பலவகையில் உதவிகள் செய்தபடியேதான் இருக்கின்றனர்.

 

 

CORONA


இந்தசூழலில் கரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் பங்கு சற்று அபரீதமானதாகவே இருந்துவருகிறது, அவர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உணவு வழங்குவது, உணவுப்பொருள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எப்பொழுதுமே காவல்துறையினரை வில்லன்களை போல பார்த்துவந்த மனித சமூகம், கரோனா வைரஸ் பணிகளுக்குப்பிறகு அவர்களை சற்று பேசவே செய்திருக்கிறது.
 

 nakkheeran app



அந்தவகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் சரகம் மிகவும் பின்தங்கிய கிராமபகுதிகளை கொண்டது என்பதால், அங்குள்ள காவல்துறையினர் தினந்தினம் ஏதாவது ஒருபகுதியில், ஏதாவது ஒரு உதவிகளை சத்தமே இல்லாமல் செய்துகொண்டே இருக்கின்றனர். காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா ஒவ்வொரு கிராமமாக முதற்கட்டமாக, அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கிவந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக  தற்போது கிராமம் கிராமமாக கபசுரக் குடிநீர் வழங்கி, விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துவருகிறார்.

"கபசுரக் குடிநீரை தினமும் அரசு மருத்துவர்களின் ஆலோசனைப்படியே காய்ச்சி வடிகட்டிய நீரை போலீஸ் வாகனத்தில் எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று, கரோனா குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து பிறகு கபசுரக் குடிநீரை கொடுக்கிறோம், பந்தநல்லூர் காவல்சராக பகுதி கிராமபுற பகுதிகள் என்பதால் கபசுர குடிநீரோ, பொடியோ கிடைக்கவில்லை என சில கிராமத்து மக்கள் கூறினார்கள். அதனால் கபசுர குடிநீர் வழங்க முடிவெடுத்து வழங்கிவருகிறோம்.

 

CORONA

 

தற்போது விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளித்திருப்பதால் பெண்களும் ஆண்களும் வயற்காட்டில் கோடை சாகுபடி வேலை பார்த்துவருகின்றனர். அவர்களிடம் கரோனா குறித்தான தகவல்களையும், சமுக இடைவேளியோடு வேலை பார்க்கவேண்டும் என்பது குறித்தான விவரங்களையும் எடுத்துக்கூறி கபசுரக்  குடிநீரை வழங்கிவருகிறோம்," என்கிறார்கள் காவலர்கள்.

போலீஸாரின் அபரீதமான பணிகள் பொதுமக்கள், வர்த்தகர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப்பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.