Skip to main content

ராங்காலில் ஏற்பட்ட தொடர்பு! குழந்தை உயிரை பறித்த கொடூர தாய்! 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Kanyakumari woman arrested in child case

 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியில் திருமணத்தை மீறிய உறவால், ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில் ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குளக்கச்சி பகுதியில் கொத்தனார் வேலை செய்யும் ஜெகதீஷ் (36) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சவிதா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


இந்த நிலையில் சவிதாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் செல்போன் ராங் கால் மூலம் மாராயபுரத்தைச் சேர்ந்த சுனில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி பழகியுள்ளனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது. மேலும், சுனில் மார்த்தாண்டம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் இருவரும் நேரடியாகவும் பேசி வந்துள்ளனர்.


இதில் சவிதா, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், பட்டப்படிப்பு படித்து முடித்து வீட்டில் இருப்பதால் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி சுனிலும் தீவிரமாக சவிதாவை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணமான இந்து பெண்கள் அடையாளமாக நெற்றி தலை முடி கீழ் பொட்டு வைப்பது வழக்கம். ஆனால் சவிதா, சுனிலிடம் வீடியோ காலில் பேசும் போதும் அவரை சந்திக்க செல்லும் போதும் அந்த பொட்டு வைக்கமாட்டாராம்.


இந்த நிலையில் சவிதா, சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போது சுனில் ஏதேச்சையாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது சவிதாவின் நெற்றி முடியின் கீழ் பொட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, ‘உனக்கு திருமணமாகி விட்டதா?’ என கேட்டுவிட்டு சுனில் கோபமாக சென்று விட்டாராம். அதன்பிறகு சுனிலுக்கு சவிதா போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை. அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சவிதா, சுனிலின் காய்கறி கடைக்கு சென்று அழுது புலம்பியுள்ளார்.


இனி மேலும் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஆனால் நீ எனக்கு வேணும். அதற்காக நான் எதையும் இழக்க தயாராக இருக்கிறேன் என கதறியுள்ளார். இதை கேட்ட சுனில் உன்னையும் எனக்கு மறக்க முடியவில்லை அப்படியென்றால் உன் கணவனையும் குழந்தைகளையும் விட்டுட்டு என்னுடன் வா என்றிருக்கிறார். அதற்கு சவிதா சரி என்று சம்மதித்து இருக்கிறார்.


இதையடுத்து சுனிலுடன் போக முடிவெடுத்த சவித்தா, நேற்று (6-ம் தேதி) மாலை இரண்டு குழந்தைகளுக்கும் உப்புமாவுடன் எலி விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார்.  இதில் கொஞ்ச நேரத்தில் இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது ஆண் குழந்தை வாயில் இருந்து நுரை தள்ளி மயக்கமடைந்துள்ளான். உடனே வேலைக்கு போன கணவர் ஜெகதீஷ்க்கு போன் செய்து குழந்தை திடீரென்று நுரை தள்ளி மயக்கமடைந்துவிட்டது என கூறியதால் ஜெகதீசும் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குழந்தையை தூக்கி கொண்டு தனியார் மருத்துவமனைக்கு போனார். அங்கு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால், பின்னர் குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.


அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இரவு முதல் குழந்தையான சஞ்சனாவும் மயக்கம் போட்டு விழுந்தது. அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.


பின்னர் சவிதாவின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, சுனிலுடன் தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சவிதாவை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்த  காரணத்தையும், சுனிலுடன் இருந்த தொடர்பையும் கூறினார். இதையடுத்து போலீசார் சவிதாவையும் சுனிலையும் கைது செய்தனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.