Skip to main content

பாளை ஜெயிலில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

கடந்த ஜன 08ம் தேதியன்று குமரி மாவட்டம் களியக்காவிளையின் கேரள பார்டர் செக் போஸ்ட் பணியிலிருந்த எஸ்.ஐ.வில்சன் இரவுப் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

தமிழக முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இந்தக் கொலையில் ஈடுபட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபீக் இரண்டு  தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக சுமார் 15 பேர்கள் வரையிலான ஸ்லீப்பிங் ஸெல்களும் சிக்கினர். இவர்கள் இந்தக் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பலவகையிலும் உதவியவர்கள்.

kanyakumari wilson si incident case salem prison

பிடிபட்ட தீவிரவாதிகள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவின் எர்ணாகுளம் பேருந்து நிலைய கழிவு ஒடையிலும், கத்தி திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டு சுமார் ஒரு வார போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பின்பு நெல்லையின் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மேலே இருந்து வந்த தகவலின் அடிப்படையில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் பாளை சிறையிலிருந்து உயர் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பாளை சிறையிலிருந்த இரண்டு தீவிரவாதிகளையும் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யும் பொருட்டு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் இவர்கள் பாதுகாப்பாக மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு பின், நேற்று (18/02/2020) காலை சேலம் சிறைக்கு 11.00 மணியளவில் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு பிரிவுப் பகுதியின் தனித் தனி ஸெல்களில் அடைக்கப்பட்டனர்.
 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் பாளை சிறையில், ஒருங்கிணைந்த ஸெல்களே இருப்பதால் ஒருவருக்கொருவர் குரூப் சேர்ந்து சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் பாதுகாப்ப தொகுதியான சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.