Skip to main content

10 பயணிகள் காயம்... காட்டு மிராண்டித் தாக்குதல்... டோல்கேட் ஊழியர்களின் அத்துமீறல்! எஸ்.டி.பி.ஐ.ஆர்ப்பாட்டம்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

நம்மை யார் கேட்க முடியும். நாம் தான் இங்கே ராஜா என்ற கர்வத்திலிருக்கிறார்கள் டோல் கேட் ஊழியர்கள்.

குமரி மாவட்ட மணவாளக்குறிச்சியின் ஆறாம்விளைப் பகுதியின் சேக் சுலைமான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் 10 பேர்களுடன் தூத்துக்குடி திருமண நிகழ்ச்சிக்காக வாகனத்தில் வந்தனர். நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி டோல் கேட்டில், தற்போதைய பாஸ்டேக் நடைமுறைப்படி, பாஸ்டேக் கவுண்டர்கள் 8ம், சாதாரண கவுண்டர் 2 என்று மாறுதல் செய்யப்பட்டதால் சாதாரண கவுண்டரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 

kanyakumari tollgate incident...

 

சுலைமானின் வாகனம் வெகு நேரம் காத்து நின்றதால் நிகழ்ச்சிச்சிக்குச் செல்ல தாமதமேற்பட்டுள்ளது. ஒரு வழியாகக் கவுண்டர் பக்கம் வந்த சமயம் டோல்கேட் நெட் ஒர்க் பழுது காரணமாக கட்டண ரசீது கிடைக்கவில்லை. காலதாமதம் நேரத்தைக் கருதி காரில் வந்த சர்புதீன் கட்டணத்தைத் டோல்கேட் ஊழியர்களிடம் கொடுத்து நிலைமையைச் சொன்னவர், ரசீதை நீங்களே வைத்தக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊழியர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்யப் பின் தள்ளுமுள்ளு ஆகியது. உடனே டோல் கேட் ஊழியர்கள் இரும்புக் கம்பி, சேர் ஆகியவைகளைக் கொண்டு வேனில் வந்தவர்களையும், தடுக்க முயன்ற பெண்களையும் கூட முரட்டுத் தனமாகத் தாக்கியுள்ளனர். 

 

kanyakumari tollgate incident...

 

இதில் பெண்கள் உட்பட 10 பேர்கள் காயமடைந்துள்ளனர். அது சமயம், இதர வாகனத்தில் வந்த மற்றப் பயணிகள் அவர்களை மீட்டனர். இதில் சுலைமான், சல்மாபீபீ, சமீமா உள்ளிட்ட வயதான பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. கடுமையாகக் காயம்பட்ட 5 பேர்கள் நாங்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சஜீவ் டோல்கேட் ஊழியர்கள் 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினார். இது குறித்து இரண்டு தரப்புகளும் புகார்கள் கொடுத்தனர்.

 

kanyakumari tollgate incident...

 

இந்த அராஜகத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டோல்கேட்டில் நாம் வைத்தது தான். சட்டம் என்ற கெத்திலிருக்கிறார்கள் ஊழியர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.