Skip to main content

காவல்நிலையத்தில் கைதி கொலை? தந்தை பரபரப்பு புகார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Kanyakumari police station case

 

குமரி மாவட்டம், பொன்மனை முல்லைசேரி விளையைச் சேர்ந்தவர் அஜித் (24). ஐ.டி.ஐ படித்துள்ள இவர், ஓட்டுநராக பணி செய்துவந்தார். குடி பழக்கத்துக்கு அடிமையான அஜித், அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது வழக்கம். இதனால் அஜித் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் 3 அடிதடி வழக்குகள் உள்ளதாம்.

 

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் தகராறு செய்து அவரை அடித்துள்ளார். இதனால் குலசேகரம் போலீசார், அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். 2 மாதம் சிறை வாசத்துக்கு பிறகு கடந்த 17-ம் தேதி பிணையில் வெளியே வந்த அஜித் குலசேகரம் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தார்.


கடந்த 23-ம் தேதி கையழுத்து போட சென்ற அஜித் விஷம் குடித்து இருப்பதாக அவரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் 25-ம் தேதி அஜித் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அஜித்தை அடித்து காயப்படுத்தி அதன் பிறகு வாயில் விஷம் ஊற்றி கொன்று விட்டனர் என கூறி அஜித்தின் உடலை வாங்க மறுத்தனர். 


இதையடுத்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட காவல்துறையினர் அஜித்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அஜித்தின் தந்தை சசிகுமார், “என் மகனை குலசேகரம் போலீசார் அடிக்கடி மிரட்டி வந்தனர். அவன் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்தாலும் அவனை வழக்குகளில் ஈடுபடுத்தியே வந்தனர். இந்த நிலையில் தான் கையெழுத்து போட போன அவனை, போலீசார் அடித்ததில் இறந்து போனார்” என எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் கொடுத்தார்.


சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தக்கலை டி.எஸ்.பி கணேசன், காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் உறவினர்கள் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.