Skip to main content

மாட்டு வண்டியில் சென்று திருமணம்... தம்பதிகள் அசத்தல்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

காலமும், கலச்சாரமும் மாறியதன் விளைவாக மனிதன் தன்னுடைய பழமையையும், பாரம்பரியத்தையும் மறந்து விட்டான். அதில் ஒன்று தான் திருமணம் நிகழ்ச்சிகள் முன்பு திருமணங்கள் வீட்டு முற்றத்தில் பந்தல் போட்டு வாழைக்குலைகள் நட்டு சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வீட்டு விசேஷங்களை பரிமாறி கொள்வார்கள். மேலும் அந்த காலங்களில் பல தூரம் நடந்து சென்று திருமணம் செய்தார்கள். அதன் பிறகு மாட்டு வண்டியிலும், பின்னர் அம்பாசிடர் காரிலும் சென்று திருமணம் செய்தார்கள். தற்போது நவீன காலத்தில் சொகுசு காரில் மாப்பிள்ளை போய் திருமணம் செய்வதை தான் இப்போது நாம் பார்க்கிறோம்.

இந்த நிலையில் தான் குமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள சேக்கல் பகுதியை சேர்ந்த ஜெபசாலமேனுக்கு திற்பரப்பை சேர்ந்த ஆஞ்சலா மெர்சியை பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்து வைத்தனர். தன்னுடைய திருமணத்தை பழமையும், பாரம்பரியமும் மாறாமல் நடத்த ஜெபசாலிமோனும் ஆஞ்சலா மெர்சியும் விரும்பினார்கள். அதன்படி நேற்று நடந்த இவர்களின் திருமணத்தின் போது ஜெபசாலிமோன் மாட்டு வண்டியில் சென்று ஆஞ்சலா மெர்சியை கரம் பிடிக்க முடிவு செய்தார்.

 KANYAKUMARI KULASEKHARAM Go to the cart  Married couples


இதற்கு அவரின் பெற்றோர்களும் பச்சை கொடி காட்டினார்கள். அதனையடுத்து நெட்டா பகுதியை சேர்ந்த ஒருவரின் மாட்டு வண்டியை வாடகைக்கு எடுத்து அதில் வாழைக்குலையும் மற்றும் பூக்களால் அலங்கரித்து முத்துகுடை பிடித்த படியாக திருமணம் நடந்த மாஞ்சாங்கோணம் புனித குழந்தை தெரசாள் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சாலைகளில் நின்றவர்களை பார்த்து கையசைத்தபடி வந்தார் ஜெபசாலிமோன். பின்னர் திருமணம் முடிந்ததும் வெளியே வந்த மணமக்கள் மாட்டு வண்டியில் ஏறி மணமகனின் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அங்கு நின்ற உறவினர்களும், நண்பர்களும், மணமக்களுக்கு உற்சாகம் பொங்க கைத்தட்டி வாழ்த்து சொன்னார்கள்.
 

இது பற்றி மணமக்கள் கூறும்போது பழமையும், பாரம்பரியத்தையும் மறந்ததால் இன்றைக்கு இளைய தலைமுறையினர் மட்டுமல்லால் நாடே அல்லோலம் பட்டு கொண்டு இருக்கிறது. அதோடு கால்நடைகளையும் மாட்டு வண்டிகள் பயணத்தையும் மறந்ததால் விவசாயத்தையும் இழந்து சுற்றுப்புற சூழலில் ஏற்பட்டுள்ள மாசுகளால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர் என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.