Skip to main content

அரசு மருத்துவமனையில் காதலனுடன் தனி அறைக்கு சென்ற நர்ஸ்; அறையைப் பூட்டிய பொதுமக்கள்!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

Kanyakumari kulasekaram government hospital nurse and ambulance driver


கரோனா காரணத்தினால் அரசு தாலுகா மருத்துவமனைகளில் உள் நோயாளிகளும் இல்லாமல் வெளி நோயாளிகளின் வருகையும் அடியோடு குறைந்துள்ளது. இதனால் அந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியா்கள் என்ன பணிகளை செய்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கேட்கும் நிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் காதலனுடன் மருத்துவர் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

குலசேகரத்தில் 108 வாகனத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் மார்த்தாண்டத்தை சோ்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்கனவே ஆரல்வாய்மொழியில் 108 வாகனத்தில் செவிலியராக பணிபுரிந்தபோது அந்த வாகனத்தின் டிரைவராக இருந்த பாபுவை காதலித்து வந்துள்ளார். ஒரே வாகனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்ததால் அவர்களுடைய காதலும் நெருக்கமாகி வளர்ந்துவந்தது.
 

இந்தநிலையில் திவ்யாவுக்கு பணியிடமாகி குலசேகரத்துக்கு வந்தார். இதனால் காதலா்கள் இருவரும் சந்திப்பதில் இடையூறுகள் ஏற்பட்டன. இருந்த போதிலும் செல்ஃபோனில் மணிக்கணக்கில் பேசி காதலை மெருகேற்றி வந்தனர். இதற்கிடையில் காதலனை பார்க்க ஆசைப்பட்ட திவ்யா காதலனை குலசேகரம் மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். காதலன் பாபுவும் காதலிக்கு பிரியாணி மற்றும் தலையில் வைக்க பூவோடு வந்துள்ளார். மதியம் நேரம் என்பதால் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை நோயாளிகளும் இல்லை.
 

Kanyakumari kulasekaram government hospital nurse and ambulance driver

 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  காதலர்கள் மருத்துவரின் அறையைப் பூட்டி அங்கு சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துவிட்டு அறையின் வெளியில் பூட்டை போட்டு பூட்டிவிட்டு, பின்னர் குலசேகரம் போலீஸுக்கு மருத்துவனையில் திருடன் நுழைந்து விட்டான் என்று தகவல் கொடுத்தனர். இதனை தொடா்ந்து போலீசார் அங்குவந்து அறையைத் திறந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தது உறுதிபடுத்தபட்டது.
 

இதைத்தொடர்ந்து காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள் மேலும் திவ்யா மீது துறை ரீதியாக நடவடிக்கைக எடுக்க போலீசார் பரிந்துறை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.